பக்கம் எண் :

  கார்முகப் படலம்427

எங்கு உளன் ஒருவன்?
   இன்று ஏற்றின். இச் சிலை.
மங்கைதன் திருமணம்
   வாழுமால். என்பார்
 

சங்கொடு    சக்கரம்- சங்கு சக்கரங்களை; தரித்த செங்கைய -
தாங்கிய  செம்மையான  கைகளையுடைய;  சிங்க  ஏறு  அல்லனேல்-
ஆண்சிங்கம்  போன்ற  திருமால் (நாணேற்றி)  வளையாமல்  போனால்;
இதனை
- இந்தச்  சிவதனுசை; தீண்டுவான் ஒருவன் - தீண்டுவதற்கும்
தகுதியுள்ள  ஒருவன்;  எங்கு உளன் - (வேறு) எங்கே  இருக்கிறான்?;
இன்று  
-  இன்றைய  தினம்;  இச்சிலை  ஏற்றின் - (அத் திருமாலே
வந்து)  இந்த  வில்லை  நாணேற்றி  வளைப்பானாயின்;  மங்கைத்தன்
திருமணம்
- சீதையின் திருமணமானது;  வாழும் - நல்வாழ்வு பெறும்;
என்பார்
- என்று கூறினர் (சிலர்).

சிங்க     ஏறு  -  திருமால்.  விசுவாமித்திரன்   அழைத்து  வந்த
இச்சிறுவன்  திருமாலாயிருப்பின் இது கைகூடுதலும்.  சீதை   நன்மணம்
பெறுதலும்  கூடும்  என்பதாம்.  ஏனெனில்.  திருமாலைத்  தவிர வேறு
யாராலும் .இவ்விலல்லைத் தீண்டுதல் என்பதும் இயலாது.            5
 

671.‘கைதவம். தனு எனல்;
   கனகக் குன்று’ என்பார்;
‘செய்தது. அத் திசைமுன்
   தீண்டி அன்று; தன்
மொய் தவப் பெருமையின்
   முயற்சியால்’ என்பார்;
‘எய்தவன் யாவனோ.
   ஏற்றிப் பண்டு?’ என்பார்.
 
  

தனு  எனல்  - வில்லென்று   சொல்லுதல்;   கைதவம் - வஞ்சக்
சொல்லே;  கனக்  குன்று  -  (இது)  பொன்மலையான  மேருவாகும்;
என்பார்  
-  என்று  கூறுபவர்களும்;  அத்  திசைமுகன்  - பிரமன்;
செய்தது  
-  (இதனை)  இயற்றியது;  தீண்டி  அன்று - (தன்கையால்)
தொட்டுப்   பார்த்து   இல்லை;  (பின்  எவ்வாறு  இயற்றியது);  தன்
மொய்தவம்  -  
தனது  நிறைந்த  பெரிய  தவத்தின்;  பெருமையின்
முயற்சியால் -
பெருமையால்; என்பார் - என்பாரும் ஆயினர்; பண்டு
ஏற்றி  எய்தவன்  -  
முற்காலத்தில்  நாண் ஏற்றி (இதனை) எய்தவன்;
யாவனோ என்பார் -
எவனோ என்று கூறுபவர்களும்.

சிவ     தனுசிடம் அத்தன்மையை  மறுத்து  மேருவின் தன்மையை
ஏற்றிக்  கூறியது  -  அவநுதியணி.  இத்துணைப்  பெரிய   வில்லைப்
பிரமன்    தன்   கையால்   இயற்றவில்லை;    தன்   தவலிமையால்
இயற்றினான்.                                               6