பக்கம் எண் :

428பால காண்டம்  

672.‘திண் நெடு மேருவைத்
   திரட்டிற்றோ?’ என்பார்;
‘வண்ண வான் கடல் பண்டு
   கடைந்த மத்து’ என்பார்;
‘அண்ணல் வாள் அரவினுக்கு
   அரசனோ?’ என்பார்;
விண் இடு நெடிய வில்
   வீழ்ந்ததோ?’ என்பார்.
 
  

(இந்த     வில்); திண்நெடு  மேருவை - வலிய நெடிய மேருவை;
திரட்டிற்றோ  
-   திரட்டிச்   செய்ததோ;    என்பார்   -   என்று
சொல்பவர்களும்;  வண்ணவான்  கடல் - அழகிய நீண்ட பாற்கடலை;
பண்டு கடைந்த
- முன்பு கடைந்த; மத்து என்பார் - மத்தாகிய  மந்தர
மலையே  என்று  சொல்பவர்களும்;  அண்ணல்   வாள் -  பெருமை
மிகுந்த   ஒளியுள்ள;   அரவினக்கு   அரசனோ   -  பாம்புகளுக்கு
அரசனாகிய  ஆதிசேடனோ; என்பார் - என்று கூறுபவர்களும்; விண்
இடு  
-  வானத்தில்  இடுகின்ற; நெடிய வில் - நீண்ட இந்திரவில்லே;
வீழ்ந்ததோ   என்பார்
-  தவறிக்  கீழே  விழுந்துவிட்டதோ  என்று
சொல்பவர்களும்.

வில்லைக்     கண்டவர் பலபடியாகப் புனைந்து கூறினர்  என்பது -
தற்குறிப்பேற்ற  அணி.  பாம்பு  வில்லுக்கு உவமையாதல் -   ‘அரவின்
தோற்றமே போலும் சிலை’ - சீவக. 2158                         7
   

673.என். “இது கொணர்க” என.
   இயம்பினான்?’ என்பார்;
‘மன்னவர் உளர்கொலோ
   மதி கெட்டார்?’ என்பார்;
‘முன்னை ஊழ் வினையினால்
   முடிக்கில் ஆம்’ என்பார்;
கன்னியும் இச் சிலை
   காணுமோ?’ என்பார்.
 
  

இது கொணர்க என- இந்த வில்லைக் கொண்டு வருக என்று; என்
இயம்பினான்  
-  எதற்காகச் சொன்னான் (இம் மன்னன்); என்பார் -
என்று  கூறுபவர்களும்;  மதி கெட்டார் (வில்லை வளைக்க விரும்பிய)
இம்  மன்னனைப்  போல; மன்னவர் உளர்கொல் - அறிவற்ற அரசர்
வேறு    யாரேனும்    இருக்கினறார்களா?;    என்பார்   -  என்று
சொல்பவர்களும்;  முன்னை ஊழ்வினையினால் - முற்பிறப்பில் செய்த
நல்வினையால்; முடிக்கில் ஆம் என்பார் - ஒரு