இச்சிலை - இந்த வில்; உதைத்த கோற்கு - (தன்னிடத்திலிருந்து) செலுத்திய அம்புக்கு; இலக்கம் யாது - குறியாக அமைவது எது; என்பார் - என்று சொல்பவர்களும்; வேந்து - சனக மன்னன்; நச்சிலை - பெருமை மிக்க இந்த வில்லை; நங்கை மேல் - நங்கையான இச் சீதையின் திறத்திற்காகவே; நாட்டும் - நிலை நிறுத்தி?யுள்ளான்; என்பார் - என்று கூறுபவர்களும்; நேமியான் - சக்கரப் படை ஏந்திய திருமாலாகிய இந்த இராமனும்; நிச்சம் எடுக்கும் கொல் - உறுதியாக இந்த வில்லை எடுத்து வளைப்பானா; என்பார் - என்று கூறுபவர்களும்; சிற்சிலர் - சிலபேர்; விதி செய்த தீமை தான் - ஊழ்வினை விளைத்த தீமையே (இவ்வாறு அமைந்தது); என்பார் - என்று வருந்துபவர்களும் (ஆனார்). வில்லைக் குறித்துக் கண்டவர் பலபடப் புனைந்து கூறுவது. உயர்வு குறிக்கும் இடைச்சொல். 9 வில்லைக் கண்ட வேந்தவர்கள் கைவிதிர்த்தல்
|