பக்கம் எண் :

  கார்முகப் படலம்429

வேளை     வளைத்தலும் கூடும்  என்று  கூறுபவர்களும்;  கன்னியும்
இச்சிலை  
- கன்னியான சீதையும் இந்த வில்லை; காணுமோ என்பார்
- கண்டிருப்பாளோ என்று சொல்பவர்களும்.  

இந்த     வில்லைக் கன்னியின் திருமணத்தின்  பொருட்டு  வைத்த
இவனைப்   போல   மதிகெட்ட   அரசர்   இருக்கமுடியாது  என்பது.
வளைக்கப்படாது   கிடக்கும்   இந்த   வில்லைச்    சீதை   கண்டாள்
கலங்குவாள் என்றார்.                                        8
   

674. ‘இச் சிலை உதைத்த கோற்கு
   இலக்கம் யாது?’ என்பார்;
‘நச் சிலை நங்கைமேல்
   நாட்டும். வேந்து’ என்பார்;
‘நிச்சயம் எடுக்கும்கொல்
   நேமியான்!’ என்பார்;
சிற்சிலர். ‘விதி செய்த
   தீமை ஆம் என்பார்.
  
 
  

இச்சிலை  - இந்த வில்; உதைத்த கோற்கு - (தன்னிடத்திலிருந்து)
செலுத்திய  அம்புக்கு;  இலக்கம்  யாது  -  குறியாக அமைவது எது;
என்பார்  
-  என்று  சொல்பவர்களும்;  வேந்து  -  சனக  மன்னன்;
நச்சிலை  
-   பெருமை  மிக்க  இந்த  வில்லை;  நங்கை  மேல்  -
நங்கையான   இச்  சீதையின்   திறத்திற்காகவே;  நாட்டும்  -  நிலை
நிறுத்தி?யுள்ளான்;  என்பார்  -  என்று கூறுபவர்களும்; நேமியான் -
சக்கரப் படை ஏந்திய திருமாலாகிய இந்த இராமனும்; நிச்சம் எடுக்கும்
கொல்  
- உறுதியாக இந்த வில்லை எடுத்து வளைப்பானா; என்பார் -
என்று  கூறுபவர்களும்; சிற்சிலர் - சிலபேர்; விதி செய்த தீமை தான்
-  ஊழ்வினை விளைத்த தீமையே (இவ்வாறு அமைந்தது); என்பார் -
என்று வருந்துபவர்களும் (ஆனார்).

வில்லைக் குறித்துக் கண்டவர்  பலபடப் புனைந்து கூறுவது. உயர்வு
குறிக்கும் இடைச்சொல்.                                      9

                    வில்லைக் கண்ட வேந்தவர்கள் கைவிதிர்த்தல்

675.

மொய்த்தனர் இன்னணம்
   மொழியாக. மன்னன் முன்
உய்த்தனர். நிலம் முதுகு
   உளுக்கிக் கீழ் உற.
வைத்தனர்; ‘வாங்குநர்
   யாவரோ?’ எனா.