பக்கம் எண் :

430பால காண்டம்  

கைத்தலம் விதிர்த்தனர்.
   கண்ட வேந்தரே.
 

மொய்த்தனர்   - (அங்கே) நெருங்கிக் கூடியிருந்த மிதிலை மக்கள்;
இன்னணம்    மொழிய    
-   இவ்வாறு   பலபடியாகச்  சொல்லிக்
கொண்டிருக்க;  மன்னன் முன் - (அதனைச் சுமந்து வந்த பணியாளர்)
சனகன் முன்பு; உய்த்தனர்- கொண்டு வந்து; நிலம் முதுகு உளுக்கி -
நிலமகளின்  முதுகு (சுமை தாங்காமல்) நெளிந்து குழிந்து   போகும்படி;
கீழ்உற  வைத்தனர்  
- (பூமியின் மேல்) அந்த வில்லை வைத்தார்கள்;
கண்ட  வேந்தர்  
-  (அந்த வில்லை) நேரே பார்த்த அரசர் யாவரும்;
வாங்குநர்  யாவரோ  
-  (இந்த  வில்லை)  வளைக்கப்  போகின்றவர்
யாரோ?   (எவராலும்   வளைக்கமுடியாது);   எனா  -  என்று  கூறி;
கைத்தலம்  விதிர்த்தனர்  
-  (அந்த  வில்லைத் தொடுவதற்கும் கூசி)
கைந் நடுக்கம் எடுத்தனர்.  

பணியாளர்     அவ்வில்லை அரசன்முன் வைத்த அளவில் அதைக்
கண்ட அரசர் இவ்வில்லை  வளைக்க எவராலும் முடியாது எனக்  கூறிக்
கைந்நடுக்கம் எடுத்தனர் என்பது.                              10

                   சதானந்த முனிவன் வில்லின் வரலாறு உரைத்தல்

676.

போதகம் அனையவன்
   பொலிவை நோக்கி. அவ்
வேதனை தருகின்ற
   வில்லை நோக்கி. தன்
மாதினை நோக்குவான். தன்
   மனத்தை நோக்கிய
கோதமன் காதலன்
   கூறல் மேறினான்;
 

போதகம்    அனையவன்  - யானைக்   கன்றை யொத்தவனாகிய
இராமனது; பொலிவு நோக்கி- அழகைக் கண்டு; வேதனை தருகின்ற-
(அவனுக்குத்  தன் மகளைத் திருமணம் செய்விக்க   விரும்பி)  துன்பம்
தருகின்ற; அவ் வில்லை நோக்கி - (தனது விருப்பத்திற்கு இடையூறாக
உள்ள)  அந்த  வில்லின்   தன்மையையும்  பார்த்து;  தன்  மாதினை
நோக்குவான்  
- (இந்த வில் மணமுடிக்கத் தடையாக உள்ளதே; இவள்
கன்னியாகவே மூப்பாளோ என்ற மனக் கவலையோடு)  தன்   மகளைப்
பார்க்கின்ற  சனகனது;  மனத்தை  -  மனக்  கலக்கத்தை; நோகிய -
உணர்ந்த;  கோதமன்  காதலன் - கௌதமன் மகனாகிய சதானந்தன்;
கூறல் மேயினான்
- சொல்லத் தொடங்கினான்.