இமையவில்- மேருமலையை வில்லாக; வாங்கிய ஈசன்- வளைத்த சிவன்; பங்கு உறை - (தன்) இடப்பக்கத்திலே வாழும்; உமையினை- உமா தேவியை; இகழ்ந்தனன் என்ன - (தந்தையான தக்கன்) அவமதித்தான் என்ற காரணத்தால்; ஓங்கிய - பொங்கியெழுந்த; கமை அறுசினத்தன் - பொறுமையற்ற சினத்தை யுடையவனாய்; இக் கார்முகம் கொளா - இந்த வில்லை எடுத்துக்கொண்டு; சமை உறு- நடந்து கொண்டிருக்கின்ற; தக்கனார் வேள்வி - தக்கனது யாக சாலையை; சார - (நோக்கிச்) சேர. மந்தரம். இமயம். கைலாயம் என்பவற்றை மேருவுடன் வேறுபாடின்றிக் கூறுவது நூல் வழக்காகும். ‘இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்’ - கலித். 3. 12 |