பக்கம் எண் :

  கார்முகப் படலம்455

பொங்குகின்ற கொங்கைமேல்
   விடம் பொழிந்தது; என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று;
   அகம் களங்கம் இல்லையே!
 

என்    நெஞ்சு- எனது மனத்திலே; உலாவந்து - உலாவி வந்து;
அங்கு  
-  அந்த  இடத்திலே;  இயன்று - அச்செயலோடு பொருந்தி;
அனங்கன்  எய்த   
-  மன்மதன்  செலுத்திய;  அம்பின்  வந்த  -
அம்பினால் உண்டான; சிந்தைநோய்- மன நோயானது; பொங்குகின்ற
-   பெரிதும்   வெளிப்படும்  இடமான;   கொங்கைமேல்  -  (என்)
தனங்கள்மேல்; விடம் பொழிந்தது - நஞ்சினை ஊற்றியது; என்னினும்
-  என்றாலும்;  கங்குல் வந்த - (இது) நேற்றிரவில் தோன்றி வருந்திய;
திங்கள்  அன்று  
-  சந்திரன் அன்று; அகம் - (ஏனென்றால்) இதன்
மத்தியில்;  களங்கம்  இல்லை -  களங்கம் காணப்படவில்லை; இந்த
இந்து  
-  இந்தச்  சந்திரன்; எங்கு நின்று - எங்கிருந்து; எழுந்தது -
வந்ததோ? (தெரியவில்லை)

உரு   வெளிப்பாட்டில் இராமனது முகச் சந்திரன் தோன்ற அதனால்
உண்டான    துயரத்தைச்     சீதை    வெளிப்படுத்துகிறாள்.   அவள்
முகச்சந்திரனைப்  பார்த்து  இது  நஞ்சு    பொழிந்ததனாலும் நடுவிலே
களங்கத்தைப்  பெறவில்லை    ஆதலாலும்  இது  நேற்றிரவு தோன்றிய
சந்திரன் அன்று; இந்தச் சந்திரன்  இரவு  அல்லாத இப்போது எவ்வாறு
தோன்றியதோ என்று வருந்துகின்றாள்.                          51
 
  

717.‘அடர்ந்து வந்து. அனங்கன். நெஞ்சு
   அழன்று சிந்தும் அம்பு எனும்
விடம் குடைந்த மெய்யின்நின்று
   வெந்திடாது எழுந்து. வெங்
கடம் துதைந்த காரி யானை
   அன்ன காளை தாள் அடைந்து.
உடன்தொடர்ந்து போன ஆவி
   வந்தவா என்? - உள்ளமே!
 

உள்ளமே    - என் மனமே;   அனங்கன்  - மன்மதன்; நெஞ்சு
அழன்று  
- மனம் கொதிக்குமாறு; அடர்ந்து வந்து - நெருங்கி வந்து;
சிந்தும் அம்பு  எனும்  விடம்
- நஞ்சு தோய்ந்த அம்பு; குடைந்த -
குடைதலினால்; மெய்யின் நின்று - உடம்பினுள்நிலைத்து; வெந்திடாது
எழுந்து  
- வெந்தழியாமல்  வெளிப்பட்டு;  வெங்கடம்  துதைந்த  -
வெப்பமான   மதநீர்  பெருகும்;  காரி  யானை  அன்ன  -  கறுத்த
யானையைப்  போன்ற;  காளை  தாள்  அடைந்து - காளை போன்ற
பிரானுடைய  திருவடிகளைச் சரணடைந்து; உடன் தொடர்ந்துபோன -
அவனோடு  தொடர்ந்து  சென்ற; ஆவி - என் உயிரானது; வந்தவா -
திரும்பி வந்த விதம்; என் - என்னவோ?