பக்கம் எண் :

456பால காண்டம்  

‘அனங்கன்     எய்த  அம்பால்  வெந்த    உடம்பிலிருந்து  தான்
வேகாதிருக்கத்  தப்பி  வந்த  என்னுயிர் தொடர்ந்து  சென்று  இராமன்
திருவடியைச்    சரணடைந்தும்      இப்போது    துன்பப்    படுமாறு
திரும்பிவந்ததே!  இது வியப்பாக உள்ளது’  என்று  இரங்கிக் கூறுகிறாள்
சீதை.                                                    52
   

718.‘விண்ணுளே எழுந்த மேகம்
   மார்பின் நூலின் மின்னொடு. இம்
மண்ணுளே இழிந்தது என்ன.
   வந்து போன மைந்தனார்.
எண்ணுளே இருந்த போதும்.
   யாவரென்றுதோகிலென்;
கண்ணுளே இருந்த போதும்.
   என்கொல் காண்கிலாதவே?

 
  

விண்ணுள் - வானத்தில்; எழுந்த மேகம் - தோன்றிய மேகமானது;
மின்னொடு  
-  மின்னலுடன்;  இம்  மண்ணுள் - இந்த மண்ணுலகில்;
இழிந்தது  என்ன
- இறங்கியது என்று சொல்லுமாறு; மார்பின் நூலின்
-   மார்பில்   அணிந்துள்ள   முப்புரி   நூலுடன்;   வந்துபோன  -
(கன்னிமாடத்தின்  முன்  என்   கண்கள்  காணுமாறு)    வந்து சென்ற;
மைந்தனார்  
-  அப்பிரான்;  எண்ணுளே  -  என் மனத்திற்குள்ளே;
இருந்தபோதும்
-  நீங்காது  இருந்தாலும்;  யாவர்  என்று  -  இவர்
யாரென்று;   தேர்கிலேன்   -   தெரிந்து   கொள்ள  முடியவில்லை;
கண்ணுளே  
-   (என்)   கண்களுக்கு   எதிரே;  இருந்தபோதும்  -
காணப்பட்டாலும்;  காண்கிலாதது - (இன்னாரென்று) அறிந்து கொள்ள
முடியாமல் இருப்பதற்குக் காரணம்; என்கொல் - என்ன?

கண்ணிற்குள்ளே     இருப்பவரை   இன்னாரென்று  காணாமையும்
காலத்தாலும்  இடத்தாலும்  சேய்மையானவற்றையும்  அறியவல்ல மனம்
தன்னுள்   இருப்பவரை    இன்னாரென்று   தெரியாமல்   இருப்பதும்
வியப்பானதே  என்று  சீதை  கூறுகிறாள். பூணூல்  தரித்த இராமனுக்கு
மின்னலோடு கூடிய மேகம் உவமையானது.                      53
   

719.‘பெய் கடல் பிறந்து. அயல்
   பிறக்கொணா மருந்து பெற்று.
ஐய பொற் கலத்தொடு அங்கை
   விட்டு இருந்த ஆதர்போல்.
மொய் கிடக்கும் அண்ணல் தோள்
   முயங்கிடாது முன்னமே.
கைகடக்க விட்டு இருந்து
   கட்டுரைப்பது என்கொலோ?’