பக்கம் எண் :

  கார்முகப் படலம்457

பெய்     கடல் பிறந்து - பல வளங்களும் நிறைந்த பாற்கடலிலே
தோன்றி;  அயல்  பெறற்கு  ஒணா  -  வேறிடத்தில்  பெற முடியாத;
மருந்து   பெற்று   
-   அமுதத்தைத்   தம்  நல்வினைப்  பயனால்
அடைந்தும்;  ஐய  பொன் கலத்தொடு - (அதனை உடனே பருகாமல்)
அழகிய பொன்கலசத்தோடு; அம்கை விட்டிருந்து - தம் கையிலிருந்து
அதனை  நழுவவிட்ட;  ஆதர்போல் - அறிவற்ற மூடர்களைப் போல;
மொய் கிடக்கும்   
-   வலிமை  மிக்க;  அண்ணல்தோள்  -  அப்
பெருமானின் தோள்கள் (காணப் பெற்றும்); முன்னமே முயங்கிடாது -
(கண்ட) அப்போதே தழுவிக் கொள்ளாமல்; கைக் கடக்க - கைநழுவிப்
போகும்படி;  விட்டிருந்து -  விட்டொழித்துப்  பின்; கட்டுரைப்பது -
தனியிருந்து பலவாறாகக் கூறிப் புலம்புவது; என்கொல் - எதற்காக?

அமுதம்     கண்ணிற்பட்டால்   உடனே    அது    நிறைந்துள்ள
பொற்கலத்தைக்   கைப்பற்றி   உண்பது  முறை.   ஆனால்.  அப்படிச்
செய்யாது   கைநழுவவிட்ட   மூடர்போல    இராமனைக்   கண்ணால்
கண்டபோது  நான்  அவனைத்  தழுவிக்   கொள்ளாமல்  விட்டுவிட்டு
இப்போது  பலவாறு  பேசி  என்ன பயன்’  என்கிறாள் சீதை. ஆதர் -
அறிவில்லாதவர்.                                           54
   

720.என்று கொண்டு. உள் நைந்து நைந்து.
   இரங்கி. விம்மி விம்மியே.
பொன் திணிந்த கொங்கை மங்கை
   இடரின் மூழ்கு போழ்தின்வாய்.
குன்றம் அன்ன சிலை முறிந்த
   கொள்கை கண்டு. குளிர் மனத்து
ஒன்றும் உண்கண் மதி முகத்து
   ஒருத்தி செய்தது உரைசெய்வாம்.

 
  

பொன்திணிந்த   - (பொன்போன்ற) தேமல் நெருங்கிய; கொங்கை
மங்கை
- தனங்களையுடைய சீதை; என்று கொண்டு - என்று பலவாறு
சொல்லி; உள் நைந்து - மனம் மிகவும் நைந்து; இரங்கி - இரக்கமுற்று;
விம்மி விம்மி
- பெரிதும் விம்மி; இடரில் மூழ்கு போழ்தின் வாய் -
துன்பத்தில்  அழுந்திய பொழுது; குளிர் மனத்து  ஒன்றும் - குளிர்ந்த
மனத்தோடு   கூடியவளும்;   உண்கண்   மதிமுகத்து  -  மைதீட்டிய
கண்களும் சந்திரன் போன்ற முகமும் கொண்டவளான;  ஒருத்தி - ஒரு
தோழி; குன்றம்  ஒன்று  சிலை  -  மலை  போன்ற  வில்;  முறிந்த
கொள்கை  
-  முறிபட்ட  செயலை;  கண்டு  -  நேரிலே கண்டுவந்து;
செய்தது   
-   கூறிய   செய்தியை;   உரை   செய்வாம்  -  இனிச்
சொல்லுவோம்.                                             55

                            நீலமாலை உரைத்த மகிழ்ச்சிச் செய்தி

கலி விருத்தம்
 

721.வடங்களும் குழைகளும் வான வில்லிட.
தொடர்ந்த பூங் கலைகளும் குழலும் சோர்தர.