பக்கம் எண் :

458பால காண்டம்  

நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள்.
நெடுந் தடங் கிடந்த கண் நீலமாலையே.*

 
  

நெடுந் தடம் கிடந்த- பெரிய தடாகத்தில் கிடந்த;கண்நீலமாலை -
குவளை  போன்ற கண்களையுடைய நீலமாலை என்பவள்;  வடங்களும்
-  (தன்  கழுத்தில்  பூண்ட) ஆரங்களும்;  குழைகளும் - காதணியான
குழைகளும்;  வானவில்  இட -  வானவில்லைப்   போலப்  பல  நிற
ஒளிகளை  வீசவும்;  தொடர்ந்த  பூங்கலைகளும் - உடுத்த உடையும்;
குழலும்   சோர்தர  
-  மலரணிந்த  கூந்தலும்  அவிழ்ந்து  சரியவும்;
நுடங்கிய   மின்  என  
-  துவண்ட  மின்னல்  போல;  நொய்தின்
எய்தினாள்
- விரைவாக ஓடி வந்தாள்.

சீதைக்குத்     திருமணம்  நடக்குமாறு  இராமன்    வில்  முறித்த
செய்தியை  விரைவில் தெரிவிக்க வேண்டுமென்ற  ஆர்வத்தோடு  சீதை
இருக்குமிடம் வந்தாள் என்பது.

தோழியின்   பெயர் நீலமாலை. வானவில் இடுதல் - இந்திரவில்லின்
தன்மையவாய்ப்  பலநில  ஒளி  வீசுதல்.  ‘திருவில் இட்டுத்   திகழ்தரு
மேனியன்’ - சிலப். 15-156.                                   56
 

722.வந்து அடி வணங்கிலள்; வழங்கும் ஓதையள்;
அந்தம் இல் உவகையள். ஆடிப் பாடினள்;
‘சிந்தையுள் மகிழ்ச்சியும். புகுந்த செய்தியும்.
சுந்தரி! சொல்’ என. தொழுது சொல்லுவாள்;
 

வந்து     அடி- வந்ததும் சீதையின் அடிகளை; வணங்கிலள் -
விழுந்து   வணங்கவில்லை;  வழங்கும்   ஓதையள்   -  ஆரவாரம்
செய்பவளும்;   அந்தம்   இல்  உவகையள்   -   எல்லையில்லாத
மகிழ்ச்சியுடையவளுமாகி;  ஆடிப்  பாடினள் - ஆடுவதும் பாடுவதும்
ஆயினாள்  (அதைக்  கண்ட  சீதை  அவளை  நோக்கி);  சுந்தரி  -
அழகானவளே;  சிந்தையுள்  மகிழ்ச்சியும்  -  உன் மனமகிழ்ச்சியின்
காரணத்தையும்;   புகுந்த   செய்கையும்   -  (பெரு  மகிழ்ச்சிக்குக்
காரணமாக)  நடந்துள்ள  செயலையும்; சொல் - சொல்லுவாய்; என -
என்று   கேட்க;   (அந்தத்தோழி  சீதையை) தொழுது  - வணங்கி;
சொல்லுவாள்
- கூறலானாள்.

தலைவியைக்  கண்டவுடன் தோழி வணங்கவேண்டுவது முறையாகும்.
ஆனால்  பெரு  மகிழ்வால்  அத் தோழி வணங்காமல் ஆடிப்   பாடிக்
கொண்டிருந்தாள்.  பின்னர்ச்  சீதை அவளைக் கேட்கச்    செய்தியைக்
கூற முற்பட்டாள்.                                          57
 

723.‘கய ரத துரகமாக் கடலன். கல்வியன்.
தயரதன் எனும் பெயர்த் தனிச் செல் நேமியான்.