பக்கம் எண் :

  கார்முகப் படலம்459

புயல் பொழி தடக் கையான். புதல்வன்; பூங் கணை
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான்;
 

கயம்  ரதம்- யானையும் தேரும்; துரகம் மாகடலன் - குதிரையும்
ஆகியவற்றைக்     கடலெனப்    படைத்தவனும்;    கல்வியன்    -
பெருங்கல்வியில்  மேம்பட்டவனும்;  புயல்  பொழி  தடக்கையான் -
மேகம்   மழை   பொழிவதுபோல்   செல்வம்    பொழிகின்ற   நீண்ட
கையையுடையவனுமான;  தயரதன் எனும் - தசரதன் என்று;  பெயர்த்
தனிச்   செல்   
-  உலகம்  புகழத்  தனிச்  செங்கோல்  செலுத்தும்;
நேமியான்  
-  பெருமன்னனின்;  புதல்வன் -  மைந்தன்; பூங்கணை
மயல்   விளை   
-   மலர்   அம்புகளால்  உலகத்தில்  மயக்கத்தை
உண்டாக்கும்;   மதனற்கும்   -   மன்மதனைக்   காட்டிலும்;  வடிவு
மேன்மையான்
- வடிவழகு மிக்கவன் (ஒருவன் இருக்கின்றான்).     58
   

724.‘மரா மரம் இவை என
   வலிய தோளினான்;
“அரா
-அணை அமலன்” என்று
   அயிர்க்கும் ஆற்றலான்;
‘இராமன்’ என்பது பெயர்;
   இளைய கோவொடும்.
பராவ அரு முனியொடும்.
   பதி வந்து எய்தினான்;
 
  

(அந்தக்    குமரன்) இவை மராமரம் என- மராமரம் என்னும்படி;
வலிய  தோளினான்
-  வன்மையான  தோள்களையுடையவன்; அரா
அணை  அமலன்  என்று  
-  ஆதி சேடனாகிய படுக்கையில் பள்ளி
கொள்ளும்   திருமால்தான்   அவதரித்தானோ  என்று;   அயிர்க்கும்
ஆற்றலான்   
-  ஐயுறக்  கூடிய  ஆற்றல்  படைத்தவன்;  பெயர் -
(அவனுக்கு)  அவனது  பெயர்;  இராமன் என்பது - இராமன் என்பது
(அவன்);  இளைய  கோவொடும்  - தம்பியான அரச குமாரனோடும்;
பராவ   அரு   முனியொடும்  
-  அளவிட்டுப்  புகழ்வதற்கு அரிய
முனிவனோடும்;  பதி  -  (நம்) நகரை;  வந்து  எய்தினான் - வந்து
சேர்ந்தான்.

தசரதன்  மைந்தனான  இராமன் தம்பியோடும் விசுவாமித்திரனுடனும்
மிதிலை நகர்க்கு வந்தான்.                                    59
   

725.‘ “பூண் இயல் மொய்ம்பினன்.
   புனிதன் எய்த வில்
காணிய வந்தனன்”
   என்ன. காவலன்