பக்கம் எண் :

460பால காண்டம்  

ஆணையின் அடைந்த வில்
   அதனை. ஆண்தகை.
நாண் இனிது ஏற்றினான்;
   நடுங்கிற்று உம்பரே!
 

பூண்    இயல் - வாகு வலயங்களை அணிந்த; மொய்ம்பினன் -
தோள்களையுடைய  அக்குமாரன்;  புனிதன் எய்த வில் - புனிதனான
சிவன்  கைக்கொண்டு  எய்த  வில்லை;  காணிய வந்தனன் - காணும்
பொருட்டு  வந்துள்ளான்; என்ன - என்று (விசுவாமித்திரன்)   சொல்ல;
காவலன்  ஆணையின்  
- சனக ராசனின் கட்டளையால்; அடைந்த -
அங்கு  வந்து  சேர்ந்த;  வில் அதனை - அந்த வில்லை  (வளைத்து);
ஆண்  தகை  
-  ஆண்மையுள்ளவனான அக்குமாரன்;  இனிது நாண்
ஏற்றினான்
- மிக  எளிதாக  நாணேற்றினான்;  உம்பர் நடுங்கிற்று -
வானுலகும் நடுங்கியது.

மொய்ம்பு  - வலிமை வலிமை;கொண்ட தோளுக்காயிற்று. ‘பூந்தாது
மொய்ம்பினவாக’- கலித். 88.                                60
 

726.‘மாத்திரை அளவில் தாள் மடுத்து. முன் பயில்
“சூத்திரம் இது” என. தோளின் வாங்கினான்;
ஏத்தினர் இமையவர்; இழிந்த. பூ மழை;
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே!

 
  

மாத்திரை   அளவில்- ஒரு நொடிப்பொழுதில்; தாள் மடுத்து -
(அவ்வில்லின்   அடிப்பக்க   முனையை)   தன்  காலால்    மிதித்துக்
கொண்டு; முன் பயில் சூத்திரம் - முன்பு பழகிய இயந்திரம்; இது என
-  இதுவெனக் (கண்டவர்) கருதுமாறு; தோளின் வாங்கினான் - (அந்த
இராமன்)  தன்  தோள்வலியால்  அதனை  வளைத்தான்   (அப்போது);
இமையவர்  
- தேவர்கள்; ஏத்தினர் - (இராமனைப்) புகழ்ந்தார்கள்; பூ
மழை
- மலர் மழை; இழிந்த - (வானத்திலிருந்து) பொழிந்தது; வேந்து
அவை  
- (அந்த வில்) அரச சபையினர்;  நடுக்குற - நடுநடுங்கும்படி;
முறிந்து வீழ்ந்தது
- இடையே முறிந்து கீழே விழுந்து விட்டது.  

அவை - ஆகுபெயர்.                                    61

சீதை தன் ஐயம் நீங்கலும் அகத்துள் உறுதி பூணலும்
  

727.‘கோமுனியுடன் வரு கொண்டல்” என்ற பின்.
‘தாமரைக் கண்ணினான்’ என்ற தன்மையால்.
‘ஆம்; அவனேகொல்’ என்று. ஐயம் நீங்கினாள்;
வாம மேகலையினுள் வளர்ந்தது. அல்குலே!