பக்கம் எண் :

462பால காண்டம்  

ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி. அக்
கோசிகற்கு ஒரு மொழி. சனகன் கூறுவான்;
 

ஆசை உற்று- காதல் பெருகி; அயர்பவள் - தளர்பவளான சீதை;
அன்னள்  ஆயினள்
- அவ்வாறான நிலையில்  இருந்தாள் (அவ்வாறு
அது  இருக்க); சனகன் - சனக  மன்னன்; பாசு அடை - பசுமையான
இலைகளையுடைய;  கமலத்தோன்  -  தாமரையில்  தங்கும்  பிரமன்;
படைத்த  வில்  இறும்  
-  படைத்த வில் இற்று வீழ்ந்த; ஓசையின்-
ஓசையைக்  கேட்டதால்;  பெரியதோர்   உவகை  -  மிக  ஒப்பற்ற
மகிழ்ச்சியடைந்து;  அக்  கோசிகற்கு -அந்த விசுவாமித்திரனுக்கு; ஒரு
மொழி கூறுவான்
- ஒரு வார்த்தை சொல்லலானான்.

வில்லை     வளைத்தல் என்பது  நடைபெறுமா   என்று   ஏங்கிக்
கொண்டிருந்த  சனகன்  வில்  இறுத்த   ஓசை  கேட்டும்   பேருவகை
கொண்டான் என்பது.                                       64
   

730.‘உரை செய் - எம் பெரும!
   உன் புதல்வன் வேள்விதான்.
விரைவின். இன்று. ஒரு பகல்
   முடித்தல் வேட்கையோ?
முரசு எறிந்து அதிர் கழல்
   முழங்கு தானை அவ்
அரசையும். இவ் வழி.
   அழைத்தல் வேட்கையோ?

 
  

எம்    பெரும- எம்  பெருமானே!  உன்  புதல்வன் - உன்னால்
அழைத்துவரப்   பெற்ற  மைந்தனது;  வேள்விதான் - திருமணமானது;
விரைவின்
-  தாமதம்  இல்லாமல்;  இன்று  ஒரு  பகல் - இன்றைய
தினமே;  முடித்தல்  வேட்கையோ  - நிறைவேற்ற வேண்டும் என்பது
விருப்பமா?  (அல்லது);  முரசு எறிந்து - மணமுரசை எங்கும் முழக்கி;
அதிர்கழல்  
-  அதிர்கின்ற வீரக்  கழலையும்;  முழங்கு  தானை  -
ஆரவாரம் மிக்க படைகளையுமுடைய; அவ் அரசையும் - அத்  தசரத
மன்னனையும்;   இவ்வழி   -   இந்த  நகரத்துக்கு;  அழைத்தல்  -
வரவழைத்து  (திருமணத்தை)   நடத்துதல்;  வேட்கையோ  -  உமக்கு
விருப்பமா?;  உரை  செய்  -  (இவ்   விரண்டினுள்)  எது  விருப்பம்
என்பதைச்   சிந்தித்துச்    சொல்க   (என்று    சனகன்   கோசிகனை
வினவினான்.)                                              65

       முனிவன் மொழிந்தபடியே சனகன் தயரதனுக்குத் தூது விடுத்தல்
   

731.மல் வலான் அவ் உரை பகர. மா. தவன்.
‘ஒல்லையில் அவனும் வந்துறுதல். நன்று’ என.