பக்கம் எண் :

  எழுச்சிப் படலம்465

மணச்  செய்தி  சொல்ல வருகின்ற தூதர்களுக்கு  ஏற்ப மங்கலமாக
‘முரசு அதிர் அயோத்தி’ என்றார்.

மன்னர்கள்   தசரதனை   வணங்க   முந்துகின்றார்கள்.  அதனால்
அவர்களின் பொன்முடியோடு முடிகள் மோதுகின்றன என்றார்.       1
   

733.முகந்தனர் திருவருள். முறையின் எய்தினார்;
திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது. செல்வனைப்
புகழ்ந்தனர்; ‘அரச! நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது’ என. நெடிது கூறினார்.

 
  

திருவருள்  முகந்தனர்- (வாயிலையடைந்த தூதர்) உள்ளே செல்ல
அரசனது   அருளைப்பெற்றவராய்;    முறையின்    எய்தினார்   -
அரசவையில்  செல்ல  வேண்டிய முறைப்படி அரசன்  முன்பு   சென்று;
திகழ்ந்து ஒளிர்
- மிக விளங்குகின்ற; கழல் இணை தொழுது - தசரத
மன்னனின்   அடிகளை   வணங்கி;   செல்வனைப்  புகழ்ந்தனர்  -
அவ்வரசனைப்  புகழ்ந்து;  அரச  - மன்னரே; நின்  புதல்வர் - உன்
மைந்தர்; போய பின் - (விசுவாமித்திரனுடன்) இங்கிருந்து   சென்றபின்;
நிகழ்ந்ததை  
- நடந்த செயல்; இது என - இதுவாகும் என்று; நெடிது
கூறினார்
- விரிவாகக் கூறினர்.

அரசவைக்கு     அன்னிய நாட்டுத் தூதுவர்  வருங்காலத்து வாயில்
காப்பவர்  ‘அரசனிடம்  சென்று  இந்த நாட்டுத் தூதுவர்  வந்துள்ளார்’
என்று உணர்த்தி. அவனது  உத்தரவின்படி  உள்ளே விடுதல் மரபாகும்.
முறை:  அரசவையில்   செல்லும்   தூதர்கள்  அடக்கத்துடன்  நிற்கும்
முறைமையை    உணர்த்தியது.    செல்வனைப்   புகழ்தல்:  தூதர்கள்
அரசனை வணங்கி எழுந்ததும் அவனைப்புகழ்தல் மரபாகும்.        2

    சனகனது ஓலையை வாசிக்கக் கேட்டுத் தயரதன் உவகை கொள்ளல்
   

734.கூறிய தூதரும். கொணர்ந்த ஓலையை.
‘ஈறு இல் வண் புகழினாய்! இது அது’ என்றனர்;
வேறு ஒரு புலமகன் விரும்பி வாங்கினான்;
மாறு அதிர் கழலினான். ‘வாசி’ என்றனன்.
 
  

கூறிய     தூதரும்- (அவ்வாறு இராமனது வீரச் செயலை) கூறிய
தூதர்களும்;  கொணர்ந்த ஓலையை - (தாம்) கொண்டு வந்த திருமண
ஓலையைக் குறித்துக் காட்டி; ஈறு இல் வண் புகழினாய்- முடிவில்லாத
வளமான   புகழையுடையவனே!;  அது  -  அந்தச்  சனக   மன்னன்
கொடுத்த  ஓலை;  இது  -  இதுவாகும்;  என்றனர் - என்று சொல்லி
(அந்த ஓலையை) நீட்டினர்; வேறு ஒரு  புலமகன் - (அவையில் ஓலை
வாசிப்பதற்கு  என்றுள்ள)  வேறு ஓர் அறிஞனாகிய  திருமந்திர  ஓலை
நாயகம்.   (அரசனது   ஆணையினால்);   விரும்பி  வாங்கினான் -
(மகிழ்ச்சியோடு) விருப்பத்தோடு அதை வாங்கினான்; மாறு அதிர்