பக்கம் எண் :

  எழுச்சிப் படலம்467

வெற்றிவேல்-  உடையவனது   தன்மை  உடைமைப் பொருள் மேல்
ஏற்றப் பெற்றது. தக்கன் வேள்விக்கு வந்த.  வானுலகில்  வாழும் சிறந்த
தேவர்களின்  வலிமைக்கும்  விஞ்சியது   ஆதலின்  அவ்   வில்லுக்கு
‘முற்ற ஏழுலகையும் வென்ற’ என்ற அடைமொழி? தந்தார்.          5

                       தூதருக்கு அணிகலன் முதலியன வழங்குதல்
   

737.என்று உரைத்து எதிர். எதிர் இடைவிடாது. ‘நேர்
துன்றிய கனை கழல் தூதர் கொள்க!’ எனா.
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான் -
குன்று என உயரிய குவவுத் தோளினான். *

 
  

குன்று என உயரிய- மலைபோலத் திரண்ட; குவவுத் தோளினான்
-  பருத்த  தோள்களையுடைய தசரதன்; என்று எதிர் எதிர் - (என்று
வசிட்டர்  முதலோர்  முன்) மறுமொழிகள்; உரைத்து - சொல்லி; நேர்
துன்றிய   
-  ஒன்றோடு  ஒன்று  ஒத்துள்ள;  கனைகழல்  தூதர்  -
ஒலிக்கின்ற   வீரக்   கழலையணிந்த  தூதர்கள்;   கொள்க  என  -
பெற்றுக்கொள்வார்களாக   என்று;   பொன்திணி   கலங்களும்   -
பொன்னாலான   அணிகலன்களையும்;    தூசும்  -  ஆடைகளையும்;
இடைவிடாது போக்கினான்
- இடைவிடாது மேலும் மேலும் கொடுக்கச்
செய்தான்.

தன்     மைந்தனது வீரச் செயலைக்  கேட்ட  தசரதன்  மகிழ்ச்சிப்
பெருக்கால்  தூதுவர்க்கு   அணிகலன்   முதலியவற்றைக்  கொடுத்தான்
என்பது.                                                   6

              தயரதன் ஆணைப்படி வள்ளுவன் மணமுரசு அறைதல்
   

738.‘வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும்
வேனில் வேள் இருந்த அம் மிதிலை நோக்கி. நம்
சேனையும் அரசரும் செல்க. முந்து!’ எனா.
‘ஆனைமேல் மணமுரசு அறைக!’ என்று ஏவினான்.
 
  

வானவன் குலத்து- சூரிய குலத்தில் தோன்றிய; எமர் வரத்தினால்
-  எம்முன்னோர்கள்   செய்த   புண்ணியப் பயனாக; வரும் - பிறந்த;
வேனில் வேள்
- மன்மதனை ஒத்த இராமன்; இருந்த - இருந்த; அம்
மிதிலை நோக்கி
- அந்த மிதிலை நகரை நோக்கி; நம் சேனையும் -
நம்  படைகளும்;  அரசரும்  - அரசகுமாரரும்; முந்து செல்க என -
முன்னே  செல்க  என்று;  ஆனைமேல் - யானையின் மேல் வைத்து;
அணிமுரசு   
-   அழகிய   மண   முரசு;  அறைக  -  (வள்ளுவர்)
முழக்கட்டும்; என்று ஏவினான் - என்று (தசரதன்) கட்டளையிட்டான்.