பக்கம் எண் :

468பால காண்டம்  

வானவன்     - வானத்திலே  உலாப்   போகின்றவன் - கதிரவன்.
மன்மதன்   உள்ள   இடங்களில்   எல்லாம்    வசந்தனும்   கூடவே
இருப்பானாதலின்   ‘வேனில்    வேள்’   என்றார்.   அது  போலவே
இராமனைப்    பிரியாமல்     இலக்குவன்     இருக்கும்    நிலையை
உணர்த்துகின்றார்.  மணம்  முதலிய  மங்கல  நிகழ்ச்சிகளை  வள்ளுவர்
யானைமேல்  முரசை  வைத்து  அதை  முழக்கி  ஊருக்கு  அறிவித்தல்
மரபு.                                                     7
 

739.வானம் பரி விரி திரைக் கடலை. வள்ளுவன்.-
தேம் பொழி துழாய் முடிச் செங் கண் மாலவன்.
ஆம் பரிசு. உலகு எலாம் அளந்துகொண்ட நாள்.
சாம்புவன் திரிந்தென. - திரிந்து சாற்றினான்.
 
  

தேம்     பொழி- தேனைச் சொரிகின்ற;   துழாய்முடி - துழாய்
மாலையணிந்த   திருமுடியையும்;   செங்கண்   மாலவன்  -  சிவந்த
கண்களையும்  கொண்ட  திருமால்; ஆம் பரிசு - (தன்)   முறைமைக்கு
ஏற்றவாறு;  உலகு  எலாம்  -  (சுவர்க்கம். மத்திமம். பாதாளம் என்ற)
மூவுலகங்களையும்;   அளந்து   கொண்டநாள்  -  (தன்  மூவடியால்)
அளந்து   கொண்ட   காலத்தில்;    சாம்புவன்   -  (அச்செய்தியை)
சாம்பவான்;  திரிந்து என - பறையறைந்து திரிந்தது போல; வாம்பரி -
தாவிச்   செல்லும்   குதிரைகளாகிய;   விரிதிரைக்கடலை  -  விரிந்த
அலைகளையுடைய    கடலுக்கு    (சேனைக்கு);    வள்ளுவன்    -
பறையறையும்  வள்ளுவன்;  திரிந்து  சாற்றினான்  -  திரிந்து  (முரசு
அறைந்து) செய்தி தெரிவித்தான்.

வள்ளுவன்     - முரசு அறைந்து செய்தி தெரிவிப்போன். மாலவன்
உலகெலாம் அளந்து கொண்ட நாள் சாம்புவன் திரிந்தென  வள்ளுவன்
திரிந்து    சேனைக்    கடலுக்குக்   கூறினான்.    தாவிச்   செல்லும்
குதிரைகளைக் கடல் அலைகளுக்கு ஒப்புக் கூறுதல் மரபு.           8

                                 நால்வகைப் படைகளின் எழுச்சி
   

740.விடை பொரு நடையினான் சேனை வெள்ளம். ‘ஓர்
இடை இலை. உலகினில்’ என்ன. ஈண்டிய;
கடையுக முடிவினில். எவையும் கால் பட.
புடை பெயர் கடல் என. எழுந்து போயதே.
 
  

உலகினில்- உலகத்தில்; ஓர் இடை- சிறிது இடமும்; இலை என்ன
-  இல்லை என்று சொல்லுமாறு; ஈண்டிய - நெருங்கிய; விடைபொரு -
காளையைப்  போன்ற; நடையினான் - நடையுடைய தசரதன்; சேனை
வெள்ளம்  
-  சேனைக்  கூட்டமானது;  கடையுக முடிவினில் - உலக
முடிவுக்  காலத்தில்;  எவையும்  - எல்லாப் பொருள்களும்; கால்பட -
எழும் பெருங்காற்றால் அழிந்து