பக்கம் எண் :

  எழுச்சிப் படலம்469

பட;  புடை  பெயர் - (அப்போது) கரைபுரண்டு வருகின்ற; கடல் என
- கடலைப்போல; எழுந்து போயது - எழுந்து சென்றது.

பெருமிதம்     பற்றிக்  காளையின்   நடை   அரசனது   நடைக்கு
உவமையாயிற்று.  தன்மைத்  தற்குறிப்பேற்றவணி  - தசரதன்    சேனை
யுக முடிவில் பொங்கியெழும் கடல் போல எழுந்தது என்றார்.        9
   

741.சில் இடம் உலகு எனச் செறிந்த தேர்கள்தாம்
புல்லிடு சுடர் எனப் பொலிந்த. வேந்தரால்;
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால்.
வில் இடும் முகில் எனப் பொலிந்த. வேழமே.
 
  

உலகு    சில் இடமென- உலகம் சிறிய இடத்தையுடையது என்று
சொல்லுமாறு;  செறிந்த   தேர்கள்  தாம்  -  நெருங்கின  தேர்கள்;
வேந்தரால்
- (தம்மேல் ஏறியுள்ள) மன்னர்களால்; புல்லிடு சுடரென -
பொருந்திய  கதிரவனைப்  போல;  பொலிந்த - விளங்கின; வேழம் -
யானைகள்;  எல்லிடு   கதிர்மணி   -  சூரியனின்  கதிர்கள்  போல
ஒளிவிடும் இரத்தினங்கள்; எறிக்கும் ஓடையால் - இழைத்த  முகபடாம்
அணிந்திருப்பதால்;  வில்  இடும்  முகிலென  - வானவில் இடப்பட்ட
மேகம்போல; பொலிந்த - விளங்கின.

தேர்     மேல் ஏறியுள்ள  மன்னவர்க்குத்   தேர்மேல்   விளங்கும்
சூரியனும்.  இரத்தினங்கள் இழைத்துச்  செய்யப்பட்ட  நெற்றிப்  பட்டம்
அணிந்த   யானைகளுக்கு  இந்திர   வில்லோடு  கூடிய  மேகங்களும்
உவமையாகும். தேர் உதயமலையாகவும்.  வேந்தர்கள்  சூரியர்களாகவும்.
யானை     முகிலாகவும்.     ஓடை     மின்னலாகவும்      உவமை
கொள்ளத்தக்கன.                                           10
   

742.கால் விரிந்து எழு குடை. கணக்கு இல் ஓதிமம்.
பால் விரிந்து. இடை இடை பறப்ப போன்றன;
மேல் விரிந்து எழு கொடிப் படலை. விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால்!
 
  

கால்     விரிந்து- (அச்சேனைகளின்  இடையே பிடிக்கக் கூடிய)
காம்பிலிருந்து  விரிந்து;  எழுகுடை  - எழுந்துள்ள  வெண் குடைகள்;
கணக்கு  இல்  ஓதிமம்  
-  எண்ணில்லாத அன்னப் பறவைகள்; பால்
விரிந்து  
-  பால்  போன்ற  தம் வெண் சிறகுகளைப் பரப்பி; விண் -
வானத்தில்; பறப்ப- பறப்பன; போன்றன - போன்றன; மேல் விரிந்து
-  வானத்தில் விரிந்து; எழு கொடிப் படலை - எழுகின்ற கொடிகளின்
கூட்டம்;  விண் எலாம் - விண் முழுவதும்; தோல் உரிந்து - தோல்
உரியப்  பெற்று; உகுவன போன்று - சிந்துவன போன்று; தோன்றும்-
தோன்றும்.