பக்கம் எண் :

470பால காண்டம்  

சேனைகளின்     இடையே பல வெண்ணிறக்   குடைகள்  பிடிக்கப்
படுபவை.   பல  அன்னப்  பறவைகள்   தம்முடைய   வெண்மையான
சிறகுகளை  விரித்து  வானத்தில்  பறந்து   போவதையும்.  வெண்கொடி
ஆடுபவை.     வானம்     தோலுரிக்க      அவை      அங்கிருந்து
சிந்துவனவற்றையும் ஒத்துள்ளன என்பார். தற்குறிப்பேற்ற அணி.     11
   

743.நுடங்கிய துகிற் கொடி நூழைக் கைம் மலைக்
கடம் கலுழ் சேனையை. ‘கடல் இது ஆம்’ என.
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில்.
தடம் புனல் பருகிடத் தாழ்வ போன்றவே.
 

நுடங்கிய   துகில்கொடி- (யானையின்மேல்) அசைந்து ஆடுகின்ற
வெண்மையான  கொடிகள்;  கடம்  கலுழ்  -  மத  நீர்  ஒழுகுகின்ற;
நூழைக்   கைம்மலை   சேனையை   
-   உள்துளையோடு  கூடிய
துதிக்கையையுடைய  யானைப்படையை;  இது கடல் ஆம் என - இது
ஒரு  கடலாம் என்று கருதி; இடம்பட எங்கணும் - இடம் மறையும்படி
(வானத்தில்)  எங்கும்; எழுந்த வெண்முகில் - எழுந்த வெண்மையான
மேகங்கள்;  தடம்புனல் - மிகுதியாக (கடல்) நீரை; பருகிடத் தாழ்வ-
குடிக்க இறங்குவனவற்றை; போன்ற - ஒத்திருந்தன.

மதநீர்     ஒழுகுகின்ற  யானைப்படை கடலை  ஒத்துள்ளது; அந்த
யானைப்படை   மேல்  அசைந்தாடும்   வெண்கொடிகள்   அக்கடலின்
நீரைப்  பருகுமாறு  வந்த  வெண்மேகங்களை  ஒத்துள்ளன.  தன்மைத்
தற்குறிப்பேற்ற அணி.                                       12
 
  

744.இழையிடை இள வெயில் எறிக்கும்; அவ் வெயில்.
தழையிடை நிழல் கெடத் தவழும்; அத் தழை.
மழையிடை எழில் கெட மலரும்; அம் மழை.
குழைவுற முழங்கிடும். குழாம் கொள் பேரியே.
 

இழை    இடை- (சேனையிலுள்ள மாதரும் வீரரும் அணிந்துள்ள)
அணிகலன்களிலிருந்து;  இளவெயில்  எறிக்கும்  - இளவெயில் வீசும்;
அவ்  வெயில்
-  அந்த  வெயிலானது;  தழை  இடை - மயில்பீலிக்
குடைகளினிடையே    தோன்றும்;  நிழல்கெட  -  நிழல்  ஒழியும்படி;
தவழும்  
-  எங்கும்   பரவும்;  அத் தழை - அந்தப் பீலிக்குடைகள்;
மழை  இடை  எழில்  
-  நீரைக்  குடித்த மேகங்களின் அழகு; கெட
மலரும்  
- அழியும்படி விளங்கித் தோன்றும்; அம்மழை குழைவு உற
-  அம்  மேகங்கள்  தளர்ச்சியடையும்படி;  குழாம்  கொள்  பேரி -
கூட்டமான பேரிகைகள்; முழங்கிடும் - முழங்கும்.