பக்கம் எண் :

500பால காண்டம்  

அன்னப் புள் என- அன்னப் பறவையைப் போல;   பாரில் செல்ல
-  நிலத்தில் நடந்து போக; தேனொடு - தேன் வண்டுகளும்; மிஞிறும்
-  மிஞிறுகளும்;  வண்டும் - மற்றை வண்டுகளும்; தும்பியும் - தும்பி
என்னும்  வண்டுகளும்;  தொடர்ந்துசெல்ல  - பின் தொடர்ந்து போக;
பூநிறை கூந்தல் மாதர்
- மலர்கள் நிறைந்த கூந்தலை யுடைய மகளிர்;
புடை  
-  பக்கங்களின்;  பிடி  நடையில் போனார் - பெண் யானை
போன்ற நடையிலே நடந்து சென்றார்கள்.

குறளர்:  குள்ளர். சிந்தர்: குறளரைக் காட்டிலும் சிறிது பெரியவர்கள்.
வண்டும்   தேனும்   நல்மணமுடைய  பூக்களில்  படியும்;   தும்பியும்
மிஞிறும் எல்லா     மணத்திலும்     செல்லக்     கூடியன   என்பர்
நச்சினார்க்கினியர் (சீவக. 893 உரை)                           68
 

800.துப்பினின். மணியின். பொன்னின்.
   சுடர் மரகதத்தின். முத்தின்.
ஒப்பு அற அமைத்த வையம்.
   ஓவியம் புகழ ஏறி.
முப்பதிற்று-இரட்டி கொண்ட
   ஆயிரம். முகிழ் மென் கொங்கைச்
செப்ப அருந் திருவின் நல்லார்.
   தெரிவையர் சூழப் போனார்.
 

முகிழ்    மென் கொங்கை - தாமரை அரும்பு போன்ற மெல்லிய
தனங்களை  யுடையவரும்; செப்ப அரு திருவின் நல்லார் - சொல்ல
முடியாத    படி   திருமகளைக்    காட்டிலும்    அழகுள்ளவர்களும்;
முப்பதிற்று  இரட்டி ஆயிரம்
- அறுபதினாயிரம் என்னும் எண்ணை;
கொண்ட  
-   கொண்டவர்களும்; தெரிவையர்  -  ஆகிய  மகளிர்;
துப்பினின்  
-  பவளங்களினாலும்; மணியின் - இரத்தினங்களினாலும்;
பொன்னின்
-  பொன்னாலும்;  சுடர்  மரகதத்தின் - ஒளி விடுகின்ற
மரகதத்தாலும்;  முத்தின்  - முத்துக்களாலும்; ஒப்பு அற அமைத்த -
(தமக்கு  வேறு  பொருள்)  நிகரில்லை என்னுமாறு   இயற்றப்பட்டுள்ள;
வையம்  
-  வண்டியில்;  ஓவியம்  புகழ  ஏறி -  சித்திரம் புகழ்ந்து
கூறுமாறு  ஏறி;  சூழப்  போனார்  -  (அந்தக் கோசலையை) சூழ்ந்து
சென்றார்கள்.

அறுபதினாயிர மங்கையர்  பலவகை  வண்டிகளில் ஏறிக்  கொண்டு
கோசலையைச் சூழச் சென்றார்கள் என்பது.                     69

சிவிகையில் வசிட்டர் செல்ல. பரதசத்துருக்கனர் அவர்பின் போதல்
 

801.செவி வயின் அமிர்தக் கேள்வி
   தெவிட்டினார். தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார்.
   ஆயிரகோடி சூழ.