பக்கம் எண் :

502பால காண்டம்  

வரும்   என்ன   -   (இராம  லக்குவர்  என்ற)  இருவரும்  போல;
போனார் - (வசிட்ட முனிவன் பின்னே) சென்றார்கள்.

அருவரை   பரத   சத்துருக்கனர்களுக்கும்.   கடல்   நால்வகைப்
படைகளுக்கும்  உவமையாம்.  வசிட்டன் பின்னே செல்லுகின்ற பரத -
சத்துருக்கனர்களுக்கு      விசுவாமித்திரன்      பின்னே     சென்ற
இராமலக்குமணர் உவமையாவர்.                              71

                                       தயரதன் சென்ற காட்சி
 

803.

நித்திய நியமம் முற்றி.
   நேமியான் பாதம் சென்னி
வைத்த பின். மறை வல்லோர்க்கு
   வரம்பு அறு மணியும் பொன்னும்.
பத்தி ஆன் நிரையும். பாரும்.
   பரிவுடன் நல்கி. போனான்-
முத்து அணி வயிரப் பூணான்.
   மங்கல முகிழ்த்த நல் நாள்.
 

முத்து  -   முத்துக்களினாலும்;   அணிவயிரம்  - அழகிய வயிர
மணிகளாலும்;   பூணான்   -  இயன்ற  அணிகளைப்  பூண்டவனான
தசரதன்;  நித்திய நியமம்  முற்றி  -  (தன்)  நித்தியக் கடமைகளை
முடித்துவிட்டு;  நேமியான் பாதம்  -  சக்கரம்  ஏந்திய  திருமாலின்
பாதங்களை;  சென்னி வைத்தபின் - (தன்) முடியிலே வைத்த பின்பு;
(குலதெய்வமான திருமாலை வணங்கின பின்னர்); மறை வல்லோர்க்கு
-  வேதங்களில் வல்ல அந்தணர்களுக்கு; வரம்பு அறு - எல்லையற்ற;
மணியும்  பொன்னும்  -  இரத்தினமும்  பொன்னும்;  பத்தி  ஆன்
நிரையும்
- வரிசையான பசுக் கூட்டங்களையும்; பாரும் - பூமியையும்;
பரிவுடன் -  மன  மகிழ்ச்சியோடு; நல்கி - தானம் செய்து; மங்கலம்
முகிழ்த்த
- மங்கலம் மலர்ந்த; நன்னாள் - நல்ல நாளில்; போனான்-
புறப்பட்டுச் சென்றான்.

அரசர்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் இரத்தினம். பொன்.
பசு.  பூமி  முதலியன தானம் செய்தல் மரபு. திருவடியைச் சென்னியில்
வைத்தல் என்பது வீழ்ந்து வணங்குதலாகும்.                    72
 

804.

இருபிறப்பாளர் எண்ணா
   யிரர். மணிக் கலசம் ஏந்தி.
அரு மறை வருக்கம் ஓதி.
   அறுகு நீர் தெளித்து வாழ்த்தி.
வரன்முறை வந்தார். கோடி
   மங்கல மழலைச் செவ் வாய்ப்