பக்கம் எண் :

  எழுச்சிப் படலம்503

பரு மணிக் கலாபத்தார். பல்
   லாண்டு இசை பரவப் போனான்.
 

இருபிறப்பாளர்  எண்ணாயிரர்  -  எண்ணாயிரம் அந்தணர்கள்;
மணிக்  கலசம்  ஏந்தி -  இரத்தின  கும்பங்களைக் கையில் ஏந்திக்
கொண்டு;   அருமறை  -  உணர்வதற்கு  அரிய  வேதமந்திரங்களின்;
வருக்கம் ஓதி-தொகுதிகளை ஓதிக் கொண்டு; அங்கை நீர் தெளித்து
-  (தம்)  கையால்  கலச  நீரைத்  தெளித்து;  வாழ்த்த  - வாழ்த்துக்
கூறவும்;   மங்கல  மழலைச்  செவ்வாய்  -  மங்கலமான  மழலைச்
சொல்லைப்  பேசும் சிவந்த  வாயையும்;  பருமணிக்  கலாபத்தார் -
பருத்த   மாணிக்கங்களாலான   மேகலையையும்   உடையவர்களாகிய;
வரன்முறை  வந்தார் - பரம்பரையாக அரசருக்குப் பல்லாண்டு பாடும்
குலத்தில்  பிறந்தவர்களான;  கோடி  -  கோடிக்கணக்கான பெண்கள்;
பல்லாண்டு  இசை பரவ  -  பல்லாண்டை  இசையோடு பாடிவரவும்;
போனான் - சென்றான்.

தசரதன் செல்லும்போது அந்தணர் வேத மந்திரங்களைச் சொல்லிக்
கலச  நீர்  தெளித்து  வாழ்த்த. மங்கையர் பலர் பல்லாண்டு பாடினர்.
இரு    பிறப்பாளர்    -    உபநயனத்திற்குமுன்   ஒரு   பிறப்பும்.
உபநயனத்தின்பின் ஞானப் பிறப்பான மற்றொரு பிறப்பும் ஆகிய இரு
பிறப்புடையவர்   அந்தணர்.  மணிக்  கலசம்  -  பூரண  கும்பம்  -
மங்கலத்திற்காகப் பூரண கலசம் எடுத்தல் மரபு.                 73
 

805.

‘கண்டிலன் என்னை’ என்பார்;
   ‘கண்டனன் என்னை’ என்பார்;
‘குண்டலம் வீழ்ந்தது’ என்பார்;
   ‘குறுக அரிது. இனிச்சென்று’ என்பார்;
‘உண்டுகொல். எழுச்சி?’ என்பார்;
   ‘ஒலித்தது சங்கம்’ என்பார்;
மண்டல வேந்தர் வந்து
   நெருங்கினர். மயங்க மாதோ.
 

சங்கம் ஒலித்தது- (சிலர்) சங்கு ஒலித்தது; என்பார் - என்பவரும்
;  எழுச்சி  உண்டு கொல்  -  (அரசன்) புறப்பாடு இருக்கும்போலும்;
என்பார் -  என்பார்களும்;  மண்டல  வேந்தர்  -  பெருந்திரளான
அரசர்கள்; மயங்க  வந்து  -  ஒன்றாகச்  சேர்ந்து வந்து; என்னைக்
கண்டிலன்
- (சிலர்) என்னைக் (இவ்வரசன்) காணவில்லை; என்பாரும்
-  என்பவரும்; என்னைக் கண்டனன் - (சிலர்) என்னைக் கண்டான்;
என்பாரும் - என்பவரும்;  குண்டலம்  வீழ்ந்தது  -  (சிலர்) எனது
குண்டலம்  கீழே  வீழ்ந்து விட்டது; என்பாரும் - என்பவரும்; இனிச்
சென்று
- (சிலர்)  இனிமேல் போய்; குறுக அரிது என்பார் - (அந்த
அரசனை)   அணுக   முடியாது  என்பார்களுமாகி;  நெருங்கினர் -
(அரசனைத் தொடர்ந்து) நெருங்கி நின்றார்கள்.