பக்கம் எண் :

  எழுச்சிப் படலம்505

தூளிவெள்ளம்  -  (சேனையால் எழுப்பப்பட்ட) புழுதிக் கூட்டம்;
ஆர்த்தது  -  நிரம்பியதாய்; விசும்பை முட்டி - வானத்தைத் தாக்கி;
மீண்டு  -  (மேலே  செல்ல  இடம்  இல்லாததால்)  திரும்பி;  அகல்
திசைகள் எங்கும்
- அகன்ற திசைகள் எல்லாவற்றையும்; போர்த்தது-
மூடிக் கொண்டது; அங்கு - அத்திசைகளில்; ஒருவர்தம்மை ஒருவர்-
ஒருவரையொருவர்;  கண்  புலம்  கொளாமை - கண்களால் பார்க்க
முடியாதபடி;  தீர்த்தது - செய்து முடித்தது; செறிந்தது ஓடி - (பின்பு
அது)  நெருக்கமாக விரைந்து ஓடி;  சகரரோடு  பகைத்தது  என -
சகரரோடு பகை கொண்டதுபோல; திரை நெடுங் கடலை எல்லாம் -
அலைகளோடு கூடிய கடலையெல்லாம்; தூர்த்தது - தூர்த்துவிட்டது.

தூளிவெள்ள     மிகுதியை   விளக்கக்   கடலைத்  தூர்த்ததாகக்
கூறப்பட்டது.    -தொடர்பு    உயர்வு   நவிற்சியணி.   தூர்த்தற்குப்
‘பகைத்தென’    என்று    காரணம்   கற்பித்துக்   கூறியது   ஏதுத்
தற்குறிப்பேற்ற அணி.                                      76
 

808.

சங்கமும் பணையும் கொம்பும்
   தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த
   பேர் ஒலி மழையை ஓட்ட.
தொங்கலும் குடையும் தோகைப்
   பிச்சமும் சுடரை ஓட்ட.
திங்கள் வெண்குடை கண்டு ஓட.
   தேவரும் மருள. - சென்றான்.
 

சங்கமும்  -  சங்க  வாத்தியமும்;  பணையும்  - புல்லாங்குழலும்;
கொம்பும்   -   ஊதுகொம்புகளும்;   தாளமும்   -   கைத்தாளமும்;
காளத்தோடு  -   எக்காளமும்;   மங்கல   பேரி  -  மங்கலத்தைத்
தெரிவிக்கும்  பேரிகையும்;  செய்த  பேரொலி  -  எழுப்பிய  பெரிய
ஓசையானது;  மழையை  -  மேகத்தில்  தோன்றும் இடியை; ஓட்ட -
துரத்தவும்;  தொங்கலும்  -  பூமாலைகளும்; குடையும் - குடைகளும்;
தோகைப்  பிச்சமும்  -  ‘மயிலின் தோகையால் செய்த பிச்சங்களும்;
சுடரை  ஓட்ட -  வெயிலை  மறைக்கவும்;  திங்கள்  வெண்குடை -
சந்திரன்  வெண்கொற்றக்  குடையை;  கண்டு  ஓட - கண்டு ஓடவும்;
தேவரும்  மருள - தேவர்களும் மயங்கும்படி; சென்றான் - (தசரதன்)
மேன்மையாகப் போனான்.

தொங்கல்     முதலியன  அரசர்   செல்லும்போது  பிடிக்கப்படும்
விருதுகள்.   பிச்சம்   -   மயில்பீலியால்   செய்யப்  பெற்ற  ஒன்று.
வெண்கொற்றக்  குடையின்  நிறமும்.   குளிர்ச்சி  தரும்  பெருமையும்
தனக்கு   இல்லையே   என்று   சந்திரன்  வெட்கப்பட்டு   ஓடினான்
என்பது.                                                 77
 

809.

மந்திர கீத ஓதை.
   வலம்புரி முழங்கும் ஓதை.