பக்கம் எண் :

506பால காண்டம்  

அந்தணர் ஆசி ஓதை.
   ஆர்த்து எழு முரசின் ஓதை.
கந்து கொல் களிற்றின் ஓதை.
   கடிகையர் கவியின் ஓதை.-
இந்திர திருவன் செல்ல -
   எழுந்தன. திசைகள் எல்லாம்.

 

இந்திர   திருவன் -  இந்திரனது செல்வம் போன்ற செல்வத்தைக்
கொண்டவனாகிய  தசரதன்; செல்ல  -  செல்லுகையில்; மந்திர கீதம்
ஓதை
 - வேத மந்திரங்களாகிய பாட்டோசையும்; வலம்புரி முழங்கும்
ஓதை
- வலம்புரிச் சங்குகள் முழங்குகின்ற ஓசையும்; அந்தணர் ஆசி
ஓதை
- அந்தணர்களின் வாழ்த்து ஒலியும்; ஆர்த்தெழு முரசின் ஓதை
-  ஆரவாரித்து  எழுகின்ற  முரசங்களின் முழக்கமும்; கந்து கொல் -
கட்டுத்  தறியை  முறிக்கின்ற; களிற்றின் ஓதை - யானைகள் பிளிறும்
ஓசையும்; கடிகையர் கவிதை ஓதை - நாழிகைக் கணக்கரின் நாழிகைப்
பாடடின் ஓசையும்  (ஆகிய  இவை); திசைகள் எல்லாம் எழுந்தன -
திக்குகள் எங்கும் எழுந்தன.

மந்திர  கீதம்  -  சாமகானம்.  நாழிகைக்  கணக்கர்  நாழிகையைப்
பாடல் வாயிலாகக் குறிப்பர்.                                 78
 

810.

நோக்கிய திசைகள் எல்லாம்
   தன்னையே நோக்கிச் செல்ல.
வீக்கிய கழற் கால் வேந்தர்
   விரிந்த கைம் மலர்கள் கூப்ப.
தாக்கிய களிறும் தேரும்
   புரவியும் படைஞர் தாளும்
ஆக்கிய தூளி. விண்ணும்
   மண்ணுலகு ஆக்க. - போனான்.
 

நோக்கிய  திசைகள்  எல்லாம்  - பார்க்கின்ற திக்குகள் யாவும்;
தன்னையே நோக்கிச் செல்லும் - (அரசனது பார்வை எப்போது தன்
மீது  பதியும்   என்ற  கருத்துடன்)  தன்னையே  பார்த்துக்  கொண்டு
செல்லும்;   கழல்   வீக்கிய கால்வேந்தர்   -   காலில்  வீரக்கழல்
அணிந்துள்ள  அரசர்கள்;  விரிந்த  கை மலர்கள் கூப்ப - மலர்ந்த
தாமரை   போன்ற   தம்  கைகள்  கூப்பவும்;  தாக்கிய  களிறும் -
(ஒன்றோடு  ஒன்று) மோதிக் கொண்டு செல்லும் யானைகளும்; தேரும்
புரவியும்
  -   தேர்களும்   குதிரைகளும்;   படைஞர்  தாளும் -
காலாட்படைகளின் பாதங்களும்; ஆக்கிய - மேலே எழுப்பிய; தூளி -
புழுதிகள்;  விண்ணும்   -   வானத்தையும்; மண்ணுலகு  ஆக்க  -
மண்ணுலகமாக்கவும்; போனான் - சென்றான்.