தசரத மன்னவனின் பார்வை விழும்போது எல்லாம் அவனையே காண்கின்ற மன்னவரின் கைகள் குவிகின்றன என்பது. 79 |
811. | வீரரும். களிறும். தேரும். புரவியும் மிடைந்த சேனை. பேர்வு இடம் இல்லை; மற்று ஓர் உலகு இல்லை; பெயர்க்கலாகா; நீருடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால். ‘பார் பொறை நீக்கினான்’ என்று உரைத்தது எப் பரிசு மன்னோ? |
வீரரும் - காலாள் வீரர்களும்; களிறும் தேரும் - யானையும் தேர்களும்; புரவியும் மிடைந்த சேனை - குதிரையும் (என்ற நால்வகைப் படையும்) நெருங்கியுள்ள சேனைகளும்; பெயர்வது ஆக - (இந்த இடத்தைவிட்டு) அப்பாலே செல்வதென்றாலும்; பேர்வு - நிலைபெயர்ந்து செல்வதற்கு; இடம் இல்லை - வேறொரு இடமில்லை; மற்று ஓர் உலகு இல்லை - (?ஏனென்றால்) வேறொரு வெற்றுலகும் இல்லையாதலால்; நீர் உடைய ஆடையாளும் - கடலாகிய நீரை ஆடையாக உடைய பூமிதேவியும் (அந்த நாற்படைகளின் பாரத்தைப் பொறுக்கமாட்டாமல்); முதுகை நெளித்தனள் - தன் முதுகை நெளித்துக் கொடுத்தாள்; என்றால் - என்றால் (தசரதன்); பார்பொறை - பூமியின் சுமையை; நீக்கினான்- போக்கினான்; என்று உரைத்தது - என்று அறிவுடையோர் கூறியது; எப் பரிசு - எவ்வாறு பொருந்தும்? |
நால்வகைச் சேனைகளும் அசைந்து கொடுக்கவும் இடமில்லை; மாற்றி வைக்கவும். மற்றோர் உலகமில்லை. ஆதலால் சுமை தாங்காது பூமி நெளிந்தாள் என்றால் அரசன் பூமிபாரம் தீர்த்தான் என்று கூறல் எவ்வாறு பொருந்தும்? என்பது வஞ்சப் புகழ்ச்சியாம். 80 |
சந்திரசயிலச் சாரலில் தங்குதல் |
812. | இன்னணம் ஏகி. மன்னன் யோசனை இரண்டு சென்றான்; பொன் வரை போலும் இந்து சயிலத்தின் சாரல் புக்கான்; மன்மதக் களிறும். மாதர் கொங்கையும். மாரன் அம்பும். தென்வரைச் சாந்தும். நாறச் சேனை சென்று. இறுத்தது அன்றே. |