மன்னன் - மன்னவர்க்கு மன்னனாகிய தசரதன்; இன்னணம் - இவ்வகையாக; ஏகி - புறப்பட்டு; யோசனை இரண்டு - இரண்டு யோசனை தூரம்; சென்றான் - சென்றான்; பொன்வரை போலும் - (பின்பு) மேரு மலையை ஒத்த; இந்து சயிலத்தின் - சந்திர சயில மலையின்; சாரல் புக்கான்- சாரலை அடைந்தான்; மன்மதன் களிறும் - மன்மதனது யானை என்று சொல்லப்படும் இரவு போன்ற பெண்களின் கூந்தலும்; மாதர் கொங்கையும் - மாதரின் தனங்களும்; மாரன் அம்பும் - மன்மதனுடைய அம்புகளாகிய மலர்களாலும்; தென்வரை சாந்தும் - பொதிய மலைச் சந்தனத்தின் குழம்பாலும்; நாறும் - நறுமணம் வீசுவதற்கு இடமாகவுள்ள; சேனையும் - அச்சதுரங்க சேனையும்; இறுத்தது - (அம் மலைச் சாரலில்) தங்கியது. மன்மதனது களிறு - கங்குலாகும். மகளிர் கூந்தலை உருவகமாக ‘மன்மதக் களிறு’ என்றார். முறை நிரல் நிரையணி. 81 |