பக்கம் எண் :

508பால காண்டம்  

மன்னன்  -   மன்னவர்க்கு  மன்னனாகிய தசரதன்; இன்னணம் -
இவ்வகையாக; ஏகி  -  புறப்பட்டு;  யோசனை  இரண்டு  - இரண்டு
யோசனை  தூரம்; சென்றான்  - சென்றான்; பொன்வரை போலும் -
(பின்பு)  மேரு  மலையை  ஒத்த;  இந்து  சயிலத்தின் - சந்திர சயில
மலையின்; சாரல் புக்கான்- சாரலை அடைந்தான்; மன்மதன் களிறும்
-   மன்மதனது   யானை  என்று  சொல்லப்படும்   இரவு   போன்ற
பெண்களின்  கூந்தலும்;  மாதர் கொங்கையும் - மாதரின் தனங்களும்;
மாரன்   அம்பும்  -  மன்மதனுடைய  அம்புகளாகிய  மலர்களாலும்;
தென்வரை  சாந்தும்  -  பொதிய  மலைச் சந்தனத்தின் குழம்பாலும்;
நாறும்   -   நறுமணம்   வீசுவதற்கு  இடமாகவுள்ள;  சேனையும்  -
அச்சதுரங்க சேனையும்; இறுத்தது - (அம் மலைச் சாரலில்) தங்கியது. 

மன்மதனது களிறு -  கங்குலாகும்.  மகளிர்  கூந்தலை உருவகமாக
‘மன்மதக் களிறு’ என்றார். முறை நிரல் நிரையணி.                81