பக்கம் எண் :

  சந்திர சயிலப் படலம்509

14. சந்திரசயிலப் படலம்
 

படலத்தின் பெயரமைதி:

தசரத     மன்னனுடன் சென்ற சேனைகள் சந்திரசயிலம் என்னும்
மலையைக்  கண்டதுபற்றிக்  கூறும்  பகுதியாக இருப்பதால் இப்பெயர்
அமைந்தது.

படலத்தின் செய்திச் சுருக்கம்:

யானை.     தேர்களின்  செயல்கள்   கூறப்பெறுகின்றன.  மகளிர்
இளைப்பாறித்   துயில்   கொண்டார்கள்.   மைந்தரும்  மங்கையரும்
திரிந்தார்கள்.    பட   மாடங்களில்   வதிந்தார்கள்.   யானைகளும்.
குதிரைகளும்  வருகின்றன;  ஊற்றுநீர் சுரந்தது; வீரர்கள் மாடத்தினுள்
நுழைந்தார்கள்;   யானைகள்   நீரைக்  கலக்கின;  அட்டிலில்  புகை
எழுந்தது. சேனைகள் பொலிவுபெற்று விளங்கின.

                                       யானைகளின் செயல்கள்
 

கலித்துறை
 

813.

கோலை ஆர் வடக் கொழுங் குவடு
   ஒடிதர நிவந்த.
ஆவி வேட்டன. வரி சிலை
   அனங்கன் மேல் கொண்ட.
பூவை வாய்ச்சியர் முலை சிலர்
   புயத்தொடும் பூட்ட.
தேவதாரத்தும். சந்தினும்.
   பூட்டின - சில மா.
 

கோவை     ஆர்   -    முத்துவடம்    முதலியன     நிரம்ப
அணைந்துள்ளனவும்; வட கொழுங்குவடு - வடதிசையிலுள்ள செழித்த
மேருமலையும்; ஒடிதர - தோற்கும்படி?; நிவந்த  - உயர்ந்துள்ளனவும்;
ஆவிவேட்டன  -  (தம் காதலரான) ஆடவரின் உயிரை(க் கொள்ளை
கொள்ள)  விரும்பியனவும்;  வரிசிலை அனங்கன்மேல் - கட்டமைந்த
வில்லையுடைய   மன்மதனால்   தன்  தொழிலுக்குக்  (காம  வேட்கை
எழுப்பவும்); கொண்ட -ஆடவர் கருவியாகக் கொண்ட; முலைகளை -
(தம்)  கொங்கைகளை;  பூவை  வாய்ச்சியர் - நாகணவாய்ப் புள்ளைப்
போல