பக்கம் எண் :

512பால காண்டம்  

இதங்கள் கொள்கிலா இறைவனை
   ஒத்தது - ஓர் யானை.
 

கதம்   கொள்  சீற்றத்தை  -  கறுவு   கொள்ளும்  கோபத்தை;
ஆற்றுவான்  -  தணிக்கும்  பொருட்டு;  இனியன  கழறி  -  (அந்த
யானைக்கு)  இனிமையான  வார்த்தைகளைக்  கூறி;  பதம்  கொள் -
(பக்குவமாக  அதனை)  வசப்படுத்த   முயலும்;  பாகனும்  - யானைப்
பாகனும்;  மந்திரி ஒத்தனன் - (தவறான வழியில் செல்லும்  அரசனை
வசப்படுத்த  முயலும்)  அமைச்சனை  ஒத்திருந்தான்;   ஓர்யானை  -
(அப்போது  அப் பாகனது இன்சொல்லைக் கொள்ளாது வெறிகொண்ட)
ஒரு  யானையானது;  பன்னூல் விதங்களால் - பல நூல்களில் கூறிய
முறைக்கு  ஏற்ப; அவன் - அந்த அமைச்சன்; மெல்லென மெல்லென
-  (மன்னவன்  மனங்கொள்ளுமாறு)  மெல்ல  மெல்ல;  விளம்பும் -
சொல்லுகின்ற; இதங்கள்- நன்மை பயக்கும் சொற்களை; கொள்கிலா -
காது  கொடுத்துக்  கேட்காத  (மாறான வழிச்செல்லும்); இறைவனை -
அரசனை; ஒத்தது - ஒப்பதாக ஆயிற்று.

பாகனுடைய     இன்சொல்லைக்   கேளாது   மதவெறி  கொண்ட
யானைக்கு.  அமைச்சனின்  இனிய  சொல்லைக் கேளாது மாறுவழியில்
நடக்கின்ற     மன்னவன்     உவமை.     ‘மதக்களிறு     வலியாக்.
கதம்தலையழியக்  கந்தோடு  ஆர்த்து  சாமகீத  ஓசையில்  தணிக்கும்
நூலறி பாகரொடு’ - (பெருங் 1.44:61-64).                        4
 

817.

மாறு காண்கிலதாய் நின்று.
   மழை என முழங்கும்
தாறு பாய் கரி. வன கரி
   தண்டத்தைத் தடவி.
பாறு பின் செல. கால் எனச்
   செல்வது. பண்டு ஓர்
ஆறு போகிய ஆறு போம்

   ஆறு போன்றதுவே.
 

மாறு- (தனது) பகையை; காண்கிலதாய் நின்று - காணப் பெறாமல்
நின்று;  மழை என முழங்கும் - மேகம் போல இடித்தொலிக்கின்றதும்;
தாறு  பாய் கரி  -  இரும்பு  முள்ளால் குத்தப் பெற்றதுமாகியயானை;
வனம்  கரி தண்டத்தை  -  காட்டு யானைகள் சென்ற ஒரு வழியை;
தடவி - பின்பற்றி; பாறு பின்செல - பருந்துகள் பின்னால் தொடர்ந்து
வர;  கால் எனச்  செல்வது  -  காற்றைப் போல விரைந்து செல்வது;
பண்டு ஓர் ஆறு போகிய- முன்பு நதி சென்ற வழியே; ஆறு போம்
- செல்லுகின்ற; ஆறு - ஆற்றை; போன்றது - ஒத்தது.