கதம் கொள் சீற்றத்தை - கறுவு கொள்ளும் கோபத்தை; ஆற்றுவான் - தணிக்கும் பொருட்டு; இனியன கழறி - (அந்த யானைக்கு) இனிமையான வார்த்தைகளைக் கூறி; பதம் கொள் - (பக்குவமாக அதனை) வசப்படுத்த முயலும்; பாகனும் - யானைப் பாகனும்; மந்திரி ஒத்தனன் - (தவறான வழியில் செல்லும் அரசனை வசப்படுத்த முயலும்) அமைச்சனை ஒத்திருந்தான்; ஓர்யானை - (அப்போது அப் பாகனது இன்சொல்லைக் கொள்ளாது வெறிகொண்ட) ஒரு யானையானது; பன்னூல் விதங்களால் - பல நூல்களில் கூறிய முறைக்கு ஏற்ப; அவன் - அந்த அமைச்சன்; மெல்லென மெல்லென - (மன்னவன் மனங்கொள்ளுமாறு) மெல்ல மெல்ல; விளம்பும் - சொல்லுகின்ற; இதங்கள்- நன்மை பயக்கும் சொற்களை; கொள்கிலா - காது கொடுத்துக் கேட்காத (மாறான வழிச்செல்லும்); இறைவனை - அரசனை; ஒத்தது - ஒப்பதாக ஆயிற்று. பாகனுடைய இன்சொல்லைக் கேளாது மதவெறி கொண்ட யானைக்கு. அமைச்சனின் இனிய சொல்லைக் கேளாது மாறுவழியில் நடக்கின்ற மன்னவன் உவமை. ‘மதக்களிறு வலியாக். கதம்தலையழியக் கந்தோடு ஆர்த்து சாமகீத ஓசையில் தணிக்கும் நூலறி பாகரொடு’ - (பெருங் 1.44:61-64). 4 |