பக்கம் எண் :

  சந்திர சயிலப் படலம்515

சென்ற;  வாய்தொறும் - இடங்கள்தோறும்;  உரைத்து உரைத்து ஓடி
- (தம்)  பொன்னை  உரைத்துக் கொண்டே ஓடிச் செல்வதால்; இருண்ட
கல்லையும்  
- கருமையான  பாறாங்கற்களையும்; தம் நிறம் ஆக்கிய-
(தம்) பொன்னிறமாகவே செய்யலாயின.

வேற்றுப்     பொருள்   வைப்பணி.  தேரின்  பொன்னிற உருளை
சென்றதால்   அங்குள்ள   பாறைகள்   பொன்னிறத்தை   அடைந்தன
என்பது. சேரினும் - எதிர்மறையும்மை.                         8
 

                          மகளிர் இளைப்பாறித் துயில்கொள்ளுதல்
 

821.

கொவ்வை நோக்கிய வாய்களை.
   இந்திர கோபம்
கவ்வி நோக்கின என்றுகொல் -
   காட்டு இன மயில்கள்.
நவ்வி நோக்கியர். நலம் கொள்
   மேகலை. பொலஞ் சாயல்-
செவ்வி நோக்கின திரிவன
   போல்வன. திரிந்த.

 

காட்டு     இன மயில்கள் - காட்டில்  வாழும் மயில் கூட்டங்கள்;
கொவ்வை நோக்கிய வாய்களை
- கோவைப் பழம் போன்ற மகளிரின்
வாய்களை;  இந்திர கோபம்  -  இந்திர  கோபப்  பூச்சிகள்;  கவ்வி
நோக்கின  
-  சென்று  சேர்ந்து அடைக்கலமாகப் புக்கனவோ; என்று
கொல்
-  என்று  நினைத்ததால்தானோ;  நலம்  கொள்  மேகலை -
அழகிய  மேகலையை  அணிந்த;  நவ்வி நோக்கியர் - மான் போன்ற
கண்களைப்  பெற்ற  பெண்களின்;  பொலஞ் சாயல் செவ்வி - சிறந்த
சாயல்  அழகை;  நோக்கின  - (எவ்வாறு உள்ளதென்று) பார்த்தவாறு;
திரிவன போல; திரிந்த - திரிந்தன.
 

மகளிரின்   வாய்கள் இந்திர கோபப் பூச்சிகள் போலிருத்தல் கண்ட
மயில்கள்  இவர்களின்  சாயல்   எவ்வாறு  உள்ளது  என்று  காணுதல்
பொருட்டும் தம் உணவான இந்திரகோபமோ என்று  ஐயுற்றும்.  திரிவன
போன்று  இருந்தன.  இந்திர   கோபம்:   செம்பட்டுப்  பூச்சி. - ஏதுத்
தற்குறிப்பேற்ற   அணி.   மயில்    மகளிர்க்குச்   சாயலில்   உவமை
கூறப்படுவது  வழக்கமாதலால்.  வாய்களைப்  பற்றிக் கருதிய  மயில்கள்
சாயல்  அழகைக்  கருத்தோடு நோக்கத் திரிந்தன என்றார். வேறு உரை:
தாம்    கவர    வேண்டுமென்று    கொவ்வைப்பழம்    கருதியிருந்த
பெண்களின்     செவ்வாய்   அழகை   இந்திர    கோபப்   பூச்சிகள்
கவர்ந்துள்ளன  என்று   காட்டு  மயில்கள்  கருதியதால்தானோ  அந்த
இந்திரகோபங்களை  உண்ண  விரும்பித்   தாம்  அதற்காகத்  திரிவது
தோன்றாதவாறு  அப்பெண்களின்  சாயல்  அழகைக்  காணத்  திரிவன
போலத் திரிந்தன என்பது.                                    9
 

822.

உய்க்கும் வாசிகள் இழிந்து. இள
   அன்னத்தின் ஒதுங்கி.