பக்கம் எண் :

  சந்திர சயிலப் படலம்517

வண்டுகள்     தாமரை   மலரென்று   மயங்கி  அவற்றில்  மொய்க்கச்
சுழல்வனவாயின.  அவரது  உருவம்  வேறு  ஒரு  பளிங்குப் பாறையில்
பிரதிபலித்தது.  அச்சாயையே ‘இது  நம்  தலைவியின் உருவமே’ என்று
தோழியர் மயங்கினர் என்பது - மயக்கவணி.                      11
 

824.

பிடி புக்கு ஆயிடை. மின்னொடும்
   பிறங்கிய மேகம்
படி புக்காலெனப் படிதர.
   பரிபுரம் புலம்ப.
துடி புக்கா இடைத் திருமகள்
   தாமரை துறந்து
குடிபுக்காலென. குடில் புக்கார் -
   கொடி அன்ன மடவார்.
 

மின்னொடும் பிறங்கிய- மின்னல்களோடு விளங்கிய; மேகங்கள் -
மேகங்கள்;  ஆ இடை - அந்தச் சந்திர  சயில மலைப் பக்கத்தில்; படி
புக்காலென  
-  பூமியில் சேர்ந்தாற்  போல;  பிடி  புக்குப் படிதர -
பெண்யானைகள்   படிந்து  நிற்க (அவற்றின்  மேல் ஏறியிருந்த); கொடி
அன்ன  மடவார்
-  பூங்கொடி போன்ற மகளிர்; துடி புக்கா இடை -
உடுக்கையை   உவமையாகக்  கூறப்பெறும்  வெல்லும்  இடை  உடைய;
திருமகள்  தாமரை துறந்து  
- இலக்குமி தாமரை மலரை விட்டு; குடி
புக்கால்  என  
- (அங்கே)  குடி புகுந்தாற் போல; பரிபுரம் புலம்ப -
(தம்  கால்களின்)  பாதச் சிலம்புகள் ஒலிக்கவும் (நடந்து); குடிபுக்கார் -
(தத்தம் விடுதிகளில்) குடி புகுந்தார்கள்.

பெண்  யானைகளின் மேல் ஏறிவந்த சில பெண்கள் அவை பூமியில்
படிந்திருக்க.   அவற்றிலிருந்து    இறங்கிச்   சென்று    ஒரு  சூழலில்
குடிபுகுந்தனர்  என்பது.   மகளிரைத்   தாங்கிய   பெண்யானைகளுக்கு
மின்னலைத் தாங்கிய மேகங்கள் உவமை.                        12
 

                        வரிசையாகக் குதிரைகளைக் கட்டிவைத்தல்
 
கலிவிருத்தம்
 

825.

உண் அமுதம் ஊட்டி. இளை
   யோர் நகர் கொணர்ந்த.
துண்ணெனும் முழக்கின.
   துருக்கர் தர வந்த.
மண்மகள்தன் மார்பின் அணி
   வன்ன சரம் என்ன.
பண் இயல் வயப் பரிகள்.
   பந்தியில் நிரைத்தார்.