மகளிரும்; வடிக்கும் அயில் வீரரும் - வடித்துக் கூர்மையாக்கிய வேல் வீரரும்; மயங்கினர் திரிந்தார் - மயங்கிய வண்ணம் திரிந்தனர் (தாம் போகும் இடம் இன்னதென்று தெரியாததால்); இடிக்கும் முரசக் குரலின - (பின்பு) முழங்குகின்ற மங்கள முரசின் ஒலியாலும்; ஏங்கும் முரல் சங்கின் - எங்கும் ஒலியெழும் சங்கநாதங்களாலும்; கொடிகளின் - கொடிகளாலும்; உணர்ந்து - (அரசனது மாளிகை இதுவென) தெரிந்து கொண்டு; அரசர் கோநகர் அடைந்தார் - அரசன் தங்கிய மாளிகையை அடைந்தார்கள். பட மாடங்கள் பலவும் ஒரே தன்மையில் அமைந்திருந்தமையால் வேற்றுமை தெரியாமல் மயங்கி. முரசு. சங்கு. கொடிகளால் அரசன் தங்கிய மாடம் இதுவென்று அறிந்தனர் என்பது ஒவ்வொரு மாடமும் அரச மாளிகை போல இருந்தது. 15 |