பக்கம் எண் :

526பால காண்டம்  

விலைமாதர்   கலை   அல்குல்  -  வேசியரின்    மேகலையணிந்த
அல்குலிலே;  புக்கவரை  -  ஈடுபட்டு அழுந்திய காமுகரை; ஒத்தன -
ஒத்து விளங்கின.

நன்னெறி    உய்ப்பவரின் குறிகளைக் கொள்ளாமலும் பக்கம் இனம்
அயல்  அலைக்கவும்  பாராமலும்  நீர்நிலைகளில் (சிறை) அழுந்துவதால்
மதயானைக்குக்   காமுகரை   உவமை  கூறினார்.  கலை  -  மேகலை
என்பதன்  முதற்குறை.   கொள்ளா.  பாரா.  ஏறா - வினையாலணையும்
பெயர்.                                                   26

                                        அட்டிலில் எழும் புகை
 

839.

துகில் இடை மடந்தையரொடு
   ஆடவர் துவன்றி.
பகல் இடைய. அட்டிலில்
   மடுத்து. எரி பரப்பும்
அகில் இடு கொழும் புகை
   அழுங்கலின். முழங்கா
முகில் படு நெடுங் கடலை
   ஒத்து உளது. அம் மூதூர்.

 

துகில்  இடை மடந்தையரொடு - ஆடையணிந்த இடையையுடைய
மகிளரோடு;ஆடவர் துவன்றி - ஆண்கள் நெருங்கி; பகல் இடைய -
கதிரவன்    ஒளியும்    மழுங்கும்படி;    அட்டலில்    மடுத்த   -
மடைப்பள்ளியிலிருந்து  கொண்டு  வந்த; எரி - நெருப்பிலே; பரப்பும்
அகில்   
-  பரப்பிய  அகிற்  கட்டைகளில்;  இடு  கொழும்புகை  -
உண்டாகிய   மிகுதியான   புகை;  அழுங்கலின்  -  நெருங்குவதால்;
முழங்கா  
- இடி இடிக்காத; முகில் - மேகங்கள்; படு நெடுங்கடலை -
தங்கிய  பெரிய   கடலை;  அம்  மூதூர் - (அவர்கள் தங்கிய) பழைய
நகர்; ஒத்துளது - ஒத்துள்ளது.

அகில்புகை     மிகுதியாகத் தங்கிய  அந்த இடத்திற்கு முகில்படுதல்
உவமையாயிற்று.  அந்த   இடத்தின்  பரப்பும். அங்குள்ளவர் எழுப்பிய
அகிற் புகையின் மிகுதியும் வருணனையில் புலப்படும்.             27

                                    சேனை மிகுதியின் பொலிவு 

அறுசீர் விருத்தம்
 

840.

கமர் உறு பொருப்பின் வாழும்
   விஞ்சையர் காண வந்தார்.
தமரையும் அறியார் நின்று
   திகைப்புறு தகைமை சான்ற