பக்கம் எண் :

  வரைக்காட்சிப் படலம்529

15. வரைக் காட்சிப் படலம்

படலத்தின் பெயர் அமைதி:

தசரதனுடன்     சென்ற   சேனைகள்   சந்திர   சைலம்  என்னும்
மலையைக்   கண்டது   பற்றிக்   கூறும்  பகுதியாதலால்  இப்  பெயர்
அமைந்துள்ளது.

படலச் சுருக்கம்:

மாண்புமிக்க    சந்திரசயிலத்தின்  தோற்றத்தையும் நிகழ்ச்சிகளையும்
மாந்தர்   காணுகின்றார்கள்.   சிறந்த   மலைக்   காட்சிகளைக்  கண்டு
வியக்கின்றார்கள்.   அம்மலைமேல்   இனிதாக  விளையாடுகின்றார்கள்.
அந்திக்  காலத்தில்  மலையினது  காட்சியைக்  கண்டு மகிழ்கின்றார்கள்.
இருளிலே  தீப  ஒளி  எங்கும்  விளங்குகின்றது.  அப்பொழுது வானில்
மதி    தோன்றியதால்   மகளிர்   மகிழ்ச்சியடைகின்றார்கள்.   கூத்தர்
ஆடுகின்றார்கள்.   மலையில்  பலவகை  ஓசைகள் எழுகின்றன. மாந்தர்
இரவை ஒருவாறு கழிக்கின்றனர்.

                          சந்திரசயிலத்தின் தோற்றமும் மாண்பும்
 

843.

சுற்றிய கடல்கள் எல்லாம்
   சுடர் மணிக் கனகக் குன்றைப்
பற்றிய வளைந்தவென்ன.
   பரந்து வந்து இறுத்த சேனை;
கொற்றவர். தேவிமார்கள்.
   மைந்தர்கள். கொம்பனார். வந்து
உற்றவர். காணலுற்ற
   மலை நிலை உரைத்தும் அன்றே!
 

சுற்றிய  கடல்கள்  எல்லாம்  - (உலகத்தை) சூழ்ந்துள்ள கடல்கள்
யாவும்;  சுடர்  மணிக்  கனகக்  குன்றை  -  ஒளிவிடும் மணிகளைக்
கொண்ட  மேருமலையை;  பற்றிய  -  கவர்ந்து கொள்ளும் பொருட்டு;
வளைந்த  என்ன  
-  வளைத்துக்  கொண்டன  என்று  சொல்லும்படி;
சேனை  பரந்து வந்து
- (அம் மலை இடங்களில்) அந்தச்  சேனைகள்
பரவி   வந்து;   இறுத்த -  தங்கின;  கொற்றவர்  தேவிமார்கள்  -
அரசர்களும்   அவ்வரசரின்   மனைவியரும்;  மைந்தர்கள்  கொம்பு
அனார்  
-  அரசிளங்குமரரும்   பூங்  கொம்பு போன்ற இளவரசியரும்
ஆகிய;  வந்து  உற்றவர் - (அங்கு) வந்து சேர்ந்தவர்கள்; காணலுற்ற
மலை   
-  காண்பதற்கு   அமைந்த  அச்  சந்திரசயிலத்தின்;  நிலை
உரைத்தும்
- தன்மையை இனிச் சொல்லுவோம்.