குவளை மலர் போன்ற; கண் மலர் - கண்களையும் பெற்ற முகத்தாமரையையுடைய; கொடிச்சிமார்க்கு - குறிஞ்சிநிலப் பெண்களுக்கு; கணித் தொழில் புரியும்- சோதிடத் தொழில் புரிந்துவரும்; வேங்கை உண்மலர் - வேங்கை மரத்தின் தேனையுண்ட மலர்களின் மேல்; வெறுத்த தும்பி - வெறுப்புற்ற கருவண்டுகள்; புதிய தேன் உதவும் - புதிய தேனைத் தருகின்ற; நாகம் தண் மலரென்று - சுரபுன்னை மலரென்று கருதி; வானத் தாரகை - விண்ணிலே விளங்குகின்ற நடசத்திரங்களின் மேல்; தாவும் - தாவுகின்றன. வேங்கை நன்னாளில் மலர்தலும். அந்த நாளில் மலைமகளிர் மணம் புரிதலும். அது பூத்தபோது மகளிர் தினைப் புனங் கொய்யத் தொடங்குதலும் வழக்காதலின் அவ் வேங்கை சோதிடரை ஒப்பதாயிற்று. ‘மலரின் தேனைக் குடித்ததால் தேன் நீங்கிய அந்த வேங்கை மலரை வெறுத்தது தும்பி; பின். வானத்திலே விளங்கும் விண்மீன்களைக் கண்டு அவற்றைச் சுரபுன்னை மலராக மயங்கி அவற்றின்மேல் தாவியது என்றார். மயக்கவணியை அங்கமாகக் கொண்டு வந்த தொடர்புயர்வு நவிற்சியணி. கணி: முகூர்த்தம் அறிவிப்பவன். 3 |