பக்கம் எண் :

  வரைக்காட்சிப் படலம்535

முடிப்புக்     குலைந்து   விழாதபடியும்;   புருவங்கள்   நெரியா  -
புருவங்கள்  வளைந்து  தோன்றாதபடியும்; பூவின் அங்கையும் மிடறும்
கூட்டி   
-  தாமரை   போனற   தம்  உள்ளங்கையையும்  குரலையும்
ஒருவழிப்படுத்தி;  நரம்பு  அளைந்து  - நரம்பைத் துழாவி (அதனால்
உண்டாக்கும்); அமுதம்  ஊறும் - அமுதம் போல் இனிமை தோற்றும்;
பாடல் கேட்டு  
-  இன்னிசையைக்  கேட்டு;  கின்னரம்  மயங்கும் -
கின்னரப் பறவைகளும் திகைத்து நிற்கும்.

‘அங்கையும்     மிடறும்  கூட்டி  நரம்பளைந்து’  என்றது. மிடற்றுக்
குரலுக்கு   ஏற்பக்   கைத்தொழில்   புரிந்து   நரம்பில்   இன்னோசை
உண்டாக்கி    என்றபடி.   கின்னரம்:    இசையின்    குற்றங்களையும்
குணங்களையும் அறியவல்லதாய்  எப்பொழுதும்  ஆணும்  பெண்ணுமாக
இருக்கும்  ஒருவகைப்  பறவை  இசையில்   வல்ல  தேவசாதி  என்றும்
பொருள் கூறுவர்.                                           9
 

852.

கள் அவிழ் கோதை மாதர்.
   காதொடும் உறவு செய்யும்
கொள்ளை வாள்-கண்ணினார்தம்
   குங்குமக் குழம்பு தங்கும்
தெள்ளிய பளிக்குப் பாறைத்
   தெளி சுனை. மணியில் செய்த
வள்ளமும் நறவும் என்ன.
   வரம்பு இல பொலியும் மன்னோ!
 

காதொடும் -  மகளிர் தம் அழகிய காதுகளோடு; உறவு செய்யும் -
உறவு  கொள்ளுகின்ற; கொள்ளை  வாள் கண்ணினார்தம் - (ஆடவர்
உயிரைக்)   கவரவல்ல   வாள்  போன்ற   கண்களையுடைய   மகளிர்
அணிந்த;   கள்   அவிழ்   கோதை   -  தேன்   சொரியும்  மலர்
மாலையணிந்த;  மாதர்தம் - மகளிர் தம்; குங்குமக் குழம்பு தங்கும் -
குங்குமச்  சேறு  தங்கிய;  தெள்ளிய பளிங்குப்  பாறை  - தெளிந்த
நிறத்தையுடைய  பளிங்குப் பாறையினால்  இயன்ற; தெளிசுனை வரம்பு
இல  
-  தெளிந்த சுனைகள் மிகப் பல; மணியில் செய்த வள்ளமும் -
செம்மணியால்  இயன்ற  கிண்ணங்களும்;   நறவும்  என்ன - கள்ளும்
போல; பொலியும் - விளங்குகின்றன.

குங்குமக்     குழம்பை  அப்பிய  மாதர்  நீராடுவதனால்  பளிங்குச்
சுனையில்   குங்குமக்   குழம்பு  தங்கும்   என்பது.   அதனால்  அப்
பளிங்குப் பாறை செம்மணி  போல்  தோன்ற. அக் குங்குமம் கலந்த நீர்
நறவு போலத் தோன்றும் என்பது புலனாகும்-தற்குறிப்பேற்ற அணி.  10
 

853.

ஆடவர் ஆவி சோர.
   அஞ்சன வாரி சோர.