பக்கம் எண் :

  வரைக்காட்சிப் படலம்551

கண்ணிற்கு     இனிய  காட்சியாலும்  முடி ஆயிரத்தாலும் சந்தனம்
மார்பில்  அணிந்ததாலும்  சந்திர  சயில   மலை  திருமாலை  ஒத்தது
என்றார். மலைக்குச் சிரம்: சிகரம். மார்பு: நடுவிடம்.               38

                                    மலையில்நின்றும் இறங்குதல்
 

881.

ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர்.
தேனும். மிஞிறும். சிறு தும்பியும். பம்பி ஆர்ப்ப.
ஆனை இனமும் பிடியும். இகல் ஆளி ஏறும்.
மானும் கலையும். என. மால் வரை வந்து இழிந்தார்.

 

ஒருவர்க்கு     ஒருவர் -  ஒருவருக்கு  ஒருவர்; ஊனும் உயிரும்
அனையார்  
-  உடம்பும்  உயிரும்  போல்பவராய்  (நட்புக் கொண்ட)
மகளிரும்; யானை இனமும் பிடியும் - ஆண்  யானை இனமும் பெண்
யானை  இனமும்  போலவும்;  இகல்  ஆளி  ஏறும் -  வலிமையுள்ள
ஆண்   சிங்கங்களும்   (பெண்   சிங்கங்களும்)   போலவும்;  மானும்
கலையும்   என  
-  பெண்மான்களும்   கலைமான்களும்   போலவும்;
தேனும்  மிஞிறும்  
-  தேனும்.  மிஞிறும்;  சிறு  தும்பியும்  - சிறிய
தும்பியும்  ஆகிய  வண்டின்  சாதிகள்;  பம்பி  ஆர்ப்ப  - நெருங்கி
ஆரவாரிக்க;  மால்  வரை  - பெரிய மலையின் அடிவாரத்தில்; வந்து
இழிந்தார்
- வந்து தங்கினார்கள்.

ஒருவர்  மீது ஒருவர் பேரன்பு கொண்டு அங்கே சேனையோடு வந்த
ஆடவரும்  மகளிரும்  யானை  முதலியன போன்ற தோற்றத்தோடு தம்
மாலைகளில்  தேன்   முதலிய  வண்டுகள் நெருங்கி ஆரவாரிக்க அந்த
மலையின் அடிவாரத்தில் வந்து தங்கினர் என்பது.                39

                                         இருளும் தீப ஒளியும்
 

882.

கால் வானகத் தேருடை வெய்யவன்.
   காய் கடுங் கண்
கோல் மாய் கதிர்ப் புல் உளைக்
   கொல் சினக் கோள்அரிம்மா.
மேல்பால் மலையில் புக. வீங்கு இருள்.
   வேறு இருந்த
மால் யானை ஈட்டம் என. வந்து
   பரந்தது அன்றே.

 

வானகம்- வானத்தில் உலாவுகின்ற; கால் தேர் உடைய - ஒற்றைச்
சக்கரத்  தேரையுடைய; வெய்யவன் - சூரியனாகிய; காய் கடுங்கண் -
எரிக்கக்கூடிய  கொடிய  கண்களையும்;  கோல்  மாய் கதிர் - எய்யும்
அம்பு மறைந்து விடுவதற்கு இடமான கதிர்களாகிய; புல்