பக்கம் எண் :

552பால காண்டம்  

உளை -  புல்லிய  புற  மயிர்களையும்; கொல்சினம்  - கொல்லவல்ல
சினத்தையும்;   கோள் அரிம் மா - மிடுக்கையும் உடைய சிங்கமானது;
மேல்  பால் மலையில்  புக  
-  மேற்குத்  திசையிலுள்ள  மலையில்
புகுந்ததால்; வீங்கு  இருள்  -  மிக்க  இருளானது;  வேறு இருந்த -
தனியாகப்  பதுங்கியிருந்த;  மால்  யானை  -  பெரிய யானைகளின்;
ஈட்டம் என
- கூட்டம்போல்; வந்து பரந்தது - வந்து பரவிற்று.

சிங்கமானது     வேறு  மலைக்குச் சென்றுவிட்டதால் பதுங்கியிருந்த
யானைக்  கூட்டம்  பிறகு   வெளிவருவதுபோலச்  சூரியன்  மறையவே
இருள்  எங்கும் பரவியது என்பது -  உருவகமும்  உவமையும்  சேர்ந்து
வந்தன.    வெய்யவனை    அரிமா    என்றதற்கு   ஏற்ப   அவனது
வெப்பத்தைக் காய்கடுங்  கண்ணாகவும்.  அவனுடைய கதிர்களை உளை
மயிராகவும்  உருவகம்  செய்தார். ‘கால் வானகத்  தேருடை’  - சிங்கம்:
காலிலும்  வாலிலும்  நகத்திலும்   அழகுடைய:  ‘கோல்  மாய்   கதிர்ப்
புல்லுளை’  -  எய்யும்   அம்புகளை   மறைக்கும்  புல்லிய  புறமயிர்ச்
செறிவுடைய  -  சிலேடை  உருவக   அணி.   அரிம்மா  -  விரித்தல்
விகாரம்.                                                  40
 

883.

மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு அரசன்தன் அனீக வெள்ளம்.
நந்தாது ஒலிக்கும் நரலைப் பெரு வேலை எல்லாம்
செந்தாமரை பூத்தென. தீபம் எடுத்தது அன்றே.

 

மந்தாரம்  முந்து மகரந்தம் - மந்தார மலர்கள் சொரியும் தேனின்;
மணம் குலாவும்
- மணங் கமழப் பெற்ற; அம்தார் அரசர்க்கு அரசன்
தன்  
-  அழகிய  மாலையணிந்த  தசரதனின்;  அனீக  வெள்ளம் -
சேனைக்  கடலனாது;  நந்தாது  ஒலிக்கும்  -  குறையாமல் ஒலிக்கும்;
நரலை
- பெரு முழக்கத்தையுடைய; பெரு வேலை எல்லாம் - பெருங்
கடலின்  இடம்  முழுவதும்;  செந்தாமரை  பூத்து என - செந்தாமரை
மலர் பூத்தது போல; தீபம் எடுத்த - விளக்குகளை ஏற்றி வைத்தது.

சேனை     தங்கியிருந்த     இடம்     முழுவதும்    விளக்குகள்
ஏற்றப்பட்டதனால்  அது  கடல்  முழுதும்  செந்தாமரை பூத்தது போல
விளங்கியது என்பது - தற்குறிப்பேற்ற அணி.                     41

                             மதியம் தோன்ற மகளிர் முகமலர்தல்
 

884.

தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி.
விண்ணில் சுடர் வெண் மதி வந்தது. மீன்கள் சூழ -
வண்ணக் கதிர் வெண்நிலவு ஈன்றன வாலுகத்தோடு
ஒள் நித்திலம் ஈன்று. ஒளிர் வால் வாளை. ஊர்வது
                                         ஒத்தே.
 

வண்ணக் கதிர் ஈன்ற -  அழகிய  வெண்ணிறக் கதிர்களையுடைய;
வெண்ணிலவு என
- நிலாப் போன்ற; வாலுகத்தோடு - வெண்