பக்கம் எண் :

  வரைக்காட்சிப் படலம்553

மணற்   குவியலின்   இடையே;  ஒள்  நித்திலம்  - நல்ல நிறமுள்ள
முத்துக்களை; ஈன்று  ஒளிர்  -  பெற்று  விளங்கும்; வால் வாளை -
வெண்மையான  சங்கு;  ஊர்வது ஒத்து - சஞ்சரிப்பது  போன்று; தண்
நற்கடலில்  
-  குளிர்ந்த  அழகிய  கடலிலே;  தளி  சிந்து  -  நீர்த்
திவலைகளை   வீசுகின்ற;   தரங்கம்   நீங்கி   -  அலைகளிலிருந்து
வெளிப்பட்டு;  சுடர் வெள்மதி  - ஒளி திகழும் வெண்ணிறச் சந்திரன்;
மீன்கள்  சூழ  
-  நட்சத்திரங்கள் சூழ்ந்திருக்க; விண்ணில் வந்தது -
வானத்திலே வந்து விளங்குவதாயிற்று.

கடலிலிருந்து     வெளிப்பட்டு   வானத்தில்  நட்சத்திரங்கள் சூழப்
பிரகாசிக்கும்  சந்திரன்  கடலிலிருந்து  வெளிப்பட்டு  வெண் மணலிலே
முத்துக்கள்   சூழ்ந்து  விளங்க   இடையே  தோன்றும்   வெண்சங்கை
ஒத்தது என்பது - தற்குறிப்பேற்றவணி.                          42
 

885.

மீன் நாறு வேலை ஒரு வெண்
   மதி ஈனும் வேலை.
நோனாது அதனை. நுவலற்கு
   அருங் கோடி வெள்ளம்
வான் நாடியரின் பொலி மாதர்
   முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது.
   அனீக வேலை.

 

மீன்  நாறு  வேலை - மீன்களின் புலால் நாற்றம் வீசும் கடலானது;
ஒரு  வெண்மதி
- வெண்ணிறமுள்ள ஒரு சந்திரனை; ஈனும் வேலை -
பெறுங்   காலத்தில்;   அதனை   நோனாது  -  அந்தச்  செயலைப்
பொறுக்காமல்; அனீக வேலை- சேனைக் கடலானது; வான் நாடியரின்
பொலி
-  வானுலக  மகளிரைப்  போல  விளங்கும்; மாதர் முகங்கள்
என்னும்  
-  பெண்களுடைய   முகங்கள்  என்று   சொல்லப்படுகின்ற;
நுவலற்கு  அருங்  கோடி வெள்ளம்
- அளவிட்டுச் சொல்ல முடியாத
கோடி  வெள்ளக்  கணக்கான;  ஆனா மதியங்கள் - கலை குறையாத
முழுமையான சந்திரர்களை; மலர்ந்தது - பெற்றது.

கடல்  ஒரு சந்திரனை ஈன்றது கண்டு பொறாமை கொண்டு சேனைக்
கடலானது   மாதர்  முகங்கள்   என்ற  பல  சந்திரர்களைப்  பெற்றது
என்பது    -    ஏதுத்    தற்குறிப்பேற்றவணி.   சேனைக்   கடலுக்கு
மீனையுடைய  கடலை  விட   மேன்மை   தோன்றுவதற்காக வேறுபாடு
கூறியது - வேற்றுமையணி.                                   43

                               கூத்தர் ஆடலும் மகளிர்கோலமும்
 

886.

மண்ணும் முழவின் ஒலி.
   மங்கையர் பாடல் ஓதை.