பக்கம் எண் :

  வரைக்காட்சிப் படலம்555

கின்ற;     அகில்  ஆவி   புலர்த்தும்  -   தமது    குழற்காட்டை
அகிற்புகையால்  புலருமாறு  செய்யும்.  (என்பதால்  இவர்கள்  மாலைக்
குளியர்  என்றாயிற்று)  ; நல்லார் - அவர்கள் (அம்மகளிர்);  தணியும்
மது   மல்லிகைத்   தாமம்  
-  மென்மையான  நறுமணம்  வீசுகின்ற
மல்லிகை  மாலையை;  வெறுத்து  -  வெறுப்புற்றுக் களைந்து;  வாசம்
திணியும்
- நறுமணம் மிக்க; இதழ்ப் பித்திகை கத்திகை - இதழ்களை
உடைய  கருமுகை  மலர் மாலையை; சேர்த்து வாரும் -  அணிவாரும்
(ஆயினர்).

இரவிற்கோர்  கோலம்  கொடி இடையார் தாம் கொள்வர் என்பதால்
கல்  இழைத்துச்  செய்த   அணிகலன்களை  நீக்கி  ஒற்றை வட முத்து
மாலை   அணிந்தனர்   என்க.   மாலையில்   நீராடிப்   புறந்தூய்மை
மேவினர்.    கூந்தற்குப்    புகையூட்டிப்     பொலிந்தனர்.   இரவை
உவகையுடன் எதிர்நோக்கினர் என்பதாம்.                       45

                                            பலவகை ஓசைகள்
 

888.

புதுக் கொண்ட வேழம் பிணிப்போர்
   புனை பாடல் ஓதை.
மதுக் கொண்ட மாந்தர்
   மடவாரின் மிழற்றும் ஓதை.
பொதுப்பெண்டிர் அல்குல்
   புனை மேகலைப் பூசல் ஓசை.
கதம் கொண்ட யானை
   களியால் களிக்கின்ற ஓதை.

 

புதுக்  கொண்ட -  பழகிய  யானைகளைக்  கொண்டு  கொப்பத்து
வீழ்த்திப்  பிடித்த  புதிய;   வேழம் - கதம் மிக்க களிற்றி யானையை;
பிணிப்போர்  
-  தம்  வயப்படுத்தக் கருதிய பாகர்கள்; புனை - தாம்
புதுவதாகப்  புனைந்த;  பாடல்  ஓதை  -   பாட்டின் ஓசையும்; மதுக்
கொண்ட மாந்தர்
- கள் மிகுதியாகப் பருகிய ஆண்கள்; மடவாரின் -
தம்  உரிமை  மகளிரிடத்து;  மிழற்றும் - காமக்குறிப்பு தோன்ற பேசும்
(குழறல்.  உளறல்);  ஓதை - ஓசையும்; பொதுப்பெண்டிர் - வேசையர்;
அல்குல்  புனை  
-  தம்  இடையில் அணிந்த; மேகலை - கிண்கிணி
பொருந்திய  மேகலையினால்   எழுப்பும்;  பூசல்  ஓதை  - சலசலப்பு
ஒலியும்; கதம் கொண்ட யானை - மதவெறி மிக்க களிறுகள்; களியால்
-  செருக்கு  மிகையால்; களிக்கின்ற - பிளிறுகின்ற; ஓதை - ஓசையும்
அப்பாடி நகரில் எழுந்தன.

யானை  வீழ்த்தும் பாகர்கள் தொழிலில் திறம் மிக்கவர். சினம் மிக்க
யானைகளின்  சினம்  தணிவித்துப்  பெரிய   கம்பத்திலே  சேர்த்தற்கு
விரவு  மொழி  பயில்வர்  (மலைபடு 326) வயப்படுத்த இசைப்பாடல்கள்
பாடவும்  செய்வர்.  கருங்களிற்று   ஒருத்தலும்.  கனிந்த அவ்விசைக்கு
வயப்படும்  என  கலித்தொகை  கூறும்.  பொதுப்  பெண்டிர் தம் இல்
புக்காரை. அவர்கள் விடுதல் அறியா