பக்கம் எண் :

  பூக்கொய் படலம்557

16. பூக் கொய் படலம்

வேந்தனுடன்  சென்றோர்   வனங்களில்   மலர்கொய்து   மகிழ்வது
கூறுவது:

தசரதச்     சக்கரவர்த்தியும்  நாட்டு  மக்களும் காலைப் பொழுதில்
சோணையாற்றங்  கரையை  யடைந்தனர். நண்பகல் நேரம். மாதர் மலர்
கொய்யச்  சோலையினை   யடைந்தனர்.   அங்கு   எய்திய  அவர்கள்
அழகிற்கு எதிர்நிற்க இயலாது மயில்  முதலான  பறவையினங்கள் நாணி
ஒதுங்கின.  மாதர்  ஆடல்  ஆடவர்க்கு  மையலை   நல்கிற்று.  மாதர்
தீண்டலால்  மலர்க்  கொம்புகள் மலர் ஈந்து  வணங்கின.  அச்சோலை.
மகளிர்க்கும்  மைந்தர்க்கும்  புலவிக்குரிய  களம்  ஆயிற்று.  மன்னரும்
மக்களும்  பல்வகை  இன்பங்கள்  துய்த்து  மகிழ்ந்த  பின்னர்  நீராடப்
புக்கனர்.

                          காலையில் சோணை ஆற்றை அடைதல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

890.

மீனுடை எயிற்றுக் கங்குல் -
   கனகனை வெகுண்டு. வெய்ய
கானுடைக் கதிர்கள் என்னும்
   ஆயிரம் கரங்கள் ஓச்சி.
தானுடை உதயம் என்னும்
   தமனியத் தறியுள் நின்று.
மானுட மடங்கல் என்ன.
   தோன்றினன். - வயங்கு வெய்யோன்.
 

மீனுடை எயிற்றுக் கங்குல் கனகனை வெகுண்டு- விண்மீன்களைப்
பற்களாகக்  கொண்ட  இரவாகிய இரணியனைச்  சினந்து; வெய்ய கான்
உடைக்  கதிர்கள்  என்னும்
- வெப்பம் உடைய செறிந்த கிரணங்கள்
என்கின்ற;  ஆயிரம்  கரங்கள் ஓச்சி - ஆயிரம் கைகளை வீசி; தான்
உடை  உதயம்  என்னும்  
-  தான் தோன்றுதற்கு இடமான உதயகிரி
என்கின்ற; தமனியத்  தறியுள் நின்று - தங்கத் தூணிலிருந்து; மானுட
மடங்கல் என்ன
- நரசிங்கப் பெருமாள் (தோன்றியது) போல; வயங்கு
வெய்யோன்   தோன்றினன்   
-   ஒளியுமிழ்ந்தவண்ணம்   கதிரவன்
உதித்தான்.