பக்கம் எண் :

  பூக்கொய் படலம்559

உள்ள     சொல்    இன்பமும்    சுவைக்கத்   தக்கவை.  கேட்டுப்பூ.
கொடிப்பூ.  நீர்ப்பூ.  நிலப்பூ  எனும்  நால்வகைப் பூக்களையும் செழிக்கச்
செய்து   நடக்கிறது  சோணை  நதி என்பது குறிப்பு. சேனை வெள்ளம்
சோணை வெள்ளத்தையடைந்தது என்பது ஒரு நயம்.               2

                            உச்சிவேளையில் சோலையைச் சார்தல்
 

892.

அடைந்து. அவண்இறுத்த பின்னர்.
   அருக்கனும் உம்பர்ச் சேர்ந்தான்;
மடந்தையர் குழாங்களோடு.
   மன்னவரும். மைந்தர்தாமும்.
குடைந்து வண்டு உறையும்
   மென் பூக் கொய்து நீராட. மை தீர்
தடங்களும். மடுவும் சூழ்ந்த.
   தண் நறுஞ் சோலை சார்ந்தார்.
 

அவண்     அடைந்து இறுத்த பின்னர் - அச்சோணை யாற்றின்
கரையில்  அச்சேனைக்  தொகுதி தங்கிய பின்பு; அருக்கனும் உம்பர்ச்
சேர்ந்தான்   
-   சூரியனும்   வான்  மேல்  ஏறினான்;  மடந்தையர்
குழாங்களோடும்  
-  (தத்தம்) மனைவியர் கூட்டங்களோடு; மன்னரும்
மைந்தர்தாமும்  
-  அரசர்களும்  இளவரசர்களும்;  வண்டு குடைந்து
உறையும்  மென்பூக்  கொய்து  
-  வண்டுகள் துளைத்துத் திளைக்கும்
மெல்லிய  மலர்களைப்  பறித்து;  நீராட - (நீரில்) மகிழ்ந்து விளையாட;
மைதீர்   தடங்களும்  மடுவும்  
-  தூய  தடாகங்களும்  மடுக்களும்
சுற்றியுள்ள;  தண் நறுஞ் சோலை சார்ந்தார் - குளிர்ச்சியும் மணமும்
மிக்க சோலையினை அடைந்தனர்.

வண்டுகள்     மலரைக்  குடைந்து தேன் ஆடல் கண்டு இவர்களும்
தடாகங்களைக்  குடைந்து   நீராடும்  நினைவுற்றனர்.  என்பது  குறிப்பு.
தடம்:  அகன்று பெரிதான நீர்நிலை. மடு: ஆழ்ந்து  சிறிதான  நீர்நிலை.
நீராடுங்காலை.  மலர்களைப்  பறித்து  வந்து.   ஒருவர்  மேல்  ஒருவர்
இலக்குத் தவறுதல் இன்றி வீசி விளையாடுதல் நீர்  விளையாட்டு  எனத்
தெரிகிறது.                                                 3

                        மாதரைக் கண்ட மயில் முதலிய பறவைகள்
 

893.

திண் சிலை புருவம் ஆக.
   சேயரிக் கருங் கண் அம்பால்.
புண் சிலர் செய்வர் என்று
   போவன போன்ற. மஞ்ஞை;
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப.
   நாணினால் பறந்த. கிள்ளை;