பக்கம் எண் :

  பூக்கொய் படலம்585

மேல்       ஏறல்      அன்றோ     உயர்வுக்குரியது     என்றவாறு.
வேற்றுப்பொருள்வைப்பணி.   ஞானத்தால்   உயர்ந்தாரும்   காமத்தால்
தாழ்வர்  என்பது குறிப்பு. “வஞ்சி போல் மருங்குலார்  மாட்டு  யாவரே
வணங்கலாதார்?” (896) என்று முன்பும் கூறினார்.                 36
 

926.

சினையின்மேல் இருந்தான். உருத் தேவரால்
வனையவும் அரியாள் வனப்பின்தலை.
நினைவும். நோக்கமும். நீக்கலன்; கைகளால்.
நனையும் நாள் முறியும் கொய்து. நல்கினான்.
 

சினையின்   மேல் இருந்தான் - (ஒரு மரத்தின்) கிளையின் மேல்
(மலர்   பறிக்கச்)   சென்றிருந்த   கணவன்;  தேவரால்  வனையவும்
அரியாள் வனப்பின் தலை
- தேவர்களாலும் வரைய  இயலாத (ஓவிய)
உருவினையுடைய   (தன்)  மனையாளின்   அழகின்மேல்;   நினைவும்
நோக்கமும்  நீக்கலன்  
-  தான்  வைத்த மனத்தையும்  கண்களையும்
நீக்க  இயலாதவன்  ஆனால்; கைகளால்  நனையும் நாள் முறியும் -
(மனத்தின் வழியே  உறுப்புகள்  செயல்படும் ஆதலால்) தன் கைகளால்.
பூ  அரும்புகளையும்  புதிய  தளிர்களையும்;  கொய்து  நல்கினான் -
கொய்து (அவள்மேல்) இட்டவண்ணம் இருந்தான்.

மாலை     தொடுக்க மலர்களைக்  கொய்து திரட்டிவரச் சென்றவன்.
வைத்த    கண்   வாங்காமல்   தன்    மனையாளையே    நினைந்து.
பார்த்தவண்ணமாய்.    செயல்    மறந்து.    கொய்த    மலர்களையும்
தளிர்களையும்  அவள் மேல் இட்டு  அர்ச்சித்த  வண்ணம்  இருந்தான்
என்பதாம்.  “உடல்  சிந்தை  வசம் அன்றோ?”  (கம்ப. 1150)  என்பார்
மேலும். நினைவு - ஆகுபெயர்.                               37
 

927.

வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி. - ஓர்
தண்டுபோல் புயத்தான் தடுமாறினான்.
‘உண்டு கோபம்’ என்று உள்ளத்து உணர்ந்து; - அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே.
 

ஓர்     தண்டு   போல்  புயத்தான்  -  தண்டாயுதம்  போன்ற
தோள்களையுடையான் ஒருவன்;வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி
-  வண்டுகள்   தங்குகின்ற   கூந்தலையுடைய  (தன்)  மனையாட்டியின்
முகத்தைப்   பார்த்து;   அவள்  தொண்டைவாயில்  -  அவளுடைய
தொண்டைக்  கனி போன்ற வாயில்; துடிப்பு ஒன்று சொல்ல - துடித்த
துடிப்பு  (குறிப்பால்)  ஒன்றை  உணர்த்த;  கோபம்  உண்டு என்று -
(இவள்   மனத்தில்)  சினம்   உண்டு  என்று;  உள்ளத்து  உணர்ந்து
தடுமாறினான்  
-  உள்ளத்தால்  உணர்ந்து  (அதனை  நீக்கும்  நெறி
தெரியாமல்) தடுமாற்றம் கொண்டான்.