17. நீர்விளையாட்டுப் படலம் மகளிரும் மைந்தரும் நீர்விளையாடலைக் கூறும் பகுதி. ஆடவரும் மகளிரும் தழுவியும் புலந்தும். நீரினை இறைத்தும். இன்பத்தை நிறைத்தும் புனல்விளையாடினர். அவர்களின் உடலில் கமழ்ந்த மணத்தால். நீர்நிலைகளிலிருந்த மீன்களும் மணம் பெற்றன. குளித்தெழுந்த மகளிர் சாணைபிடித்த மணிகளைப்போல் காட்சிதந்தனர். அவர்கள் நீர்நிலைகளிலிருந்து வெளியேறிய பின்பு. தாமரைப் பூக்கள் எல்லாம் குடிபோய்விட்டன போல். தடாகங்கள் பொலிவிழந்து போயின. அப்போது. கதிரவன் மறைந்தான்; திங்கள் எழுந்தது. நீர்நிலை நோக்கி மகளிரும் மைந்தரும் அறுசீர் விருத்தம் |