பக்கம் எண் :

590பால காண்டம்  

இது     முதல்   எட்டுக்கவிதைகள்  ஒரு  தொடர்:  தாளை  ஏய்
கமலத்தாளின்
-  தண்டுபொருந்திய கமல மலரில் வாழும் திருமகளைப்
போல;   மார்புறத்  தழுவுவாரும்   -  (தங்கள்  கணவன்மாருடைய)
மார்பகங்களை  அழுந்தத்  தழுவி நிற்பவர்களும்; தோளையே பற்றி -
(தங்கள்    கணவர்களுடைய)    தோள்களையே    பிடித்துக்கொண்டு;
வெற்றித்திரு எனத் தோன்றுவாரும்
- வெற்றித் திருமகளைப் போலத்
தோற்றம் அளிப்பவர்களும்;  பாளையே விரிந்தது என்ன - பாளைகள்
விரிந்தாற்போல; நீர்பரந்து உந்துவாரும் - நீர் பரக்குமாறு (கரங்களால்)
நீரை  வீசுபவர்களும்;  வாளைமீன்  உகள அஞ்சி - வாளை மீன்கள்
துள்ளுதற்குப்   பயந்து;   மைந்தரைத்   தழுவுவாரும்   -   தத்தம்
கணவன்மார்களைத் தழுவிக்கொள்பவர்களும்.

நீர்     பரந்து -   நீர்பரக்க -   எச்சத்திரிபு.  பல திருமகள்களும்.
திருமால்களுமாகத்     தோன்றின      நீர்நிலைகள்       என்றவாறு.
பிரிந்தறியாதவர்கள்    ஆதலால்.    வாளை   மீன்கள்  துள்ளுவதைச்
சாதகமாக்கிக்   கொண்டு    கணவன்மார்களைத்   தழுவிக்கொண்டனர்
என்க.

திருமகள்   மார்பிலும். வெற்றிமகள் தோளிலும் உறைபவர் ஆதலால்
மார்பில்     தழுவியோர்க்கும்.      தோளைத்      தழுவியோர்க்கும்
அவ்விருவரும்  உவமையாயினர்.  நீரைப்  பரவலாக   இறைக்கும்போது
பாளை  விரிந்தாற்போலத் தோன்றுவதை. நுனித்துணர்ந்து.   “பாளையே
விரிந்தது  என்ன  நீர்  பரந்து   உந்துவாரும்”  என்றார்.   கணவரைத்
தழுவிக்கொள்ள  அமயம் பார்த்திருப்பார்க்கு.  வாளை  மீன்  உதவிற்று
என்பார்.  “வாளை  மீன்  உகள  அஞ்சி   மைந்தரைத்  தழுவுவாரும்”
என்றார்.  பெண்மையின்  இயல்புப்  பண்புகளில்   நான்கில்  ஒன்றான
அச்சச் சிறப்பும் அறிவித்தார்.                                  4
 

933.

வண்டு உணக் கமழும் சுண்ணம்.
   வாச நெய் நானத்தோடும்
கொண்டு. எதிர் வீசுவாரும்;
   கோதை கொண்டு ஓச்சுவாரும்;
தொண்டை வாய்ப் பெய்து. தூநீர்.
   கொழுநர்மேல் தூகின்றாரும்;
புண்டரீகக் கை கூப்பி.
   புனல் முகந்து இறைக்கின்றாரும்.
 

வண்டு    உணக்  கமழும்  சுண்ணம்  -  (மகரந்தம்)  உண்ணும்
வண்டுகள்  உண்ண   விரும்புமாறு   மணக்கும்  சுண்ணப் பொடிகளை;
வாசநெய் நானத்தோடும் கொண்டு
- நறுமணமுள்ள தைலங்களோடும்
கத்தூரியோடும் (கையிற்) கொண்டு; எதிர் வீசுவாரும் - (எதிர்) எதிராக
வீசிக்கொள்வாரும்;    கோதை    கொண்டு     ஓச்சுவாரும்    -
மலர்மாலைகளைக்கொண்டு  வீசிக்கொள்ளுவாரும்;   தூநீர் தொண்டை
வாய்ப்பெய்து   
-   தூய   நீரினை.   கொவ்வைக்கனிபோன்ற  (தம்)
வாய்களிலே கொண்டு; கொழுநர்மேல் தூவுவாரும் - தங்கள் கணவர்