பக்கம் எண் :

604பால காண்டம்  

954.சுளியும் மென் நடை தோற்க நடந்தவர்
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என.
விளிவு தோன்ற. மிதிப்பன போன்றன-
நளினம் ஏறிய நாகு இள அன்னமே.
 

நளினம்    ஏறிய - தாமரை மலர்கள் மேல் ஏறியிருந்த; நாகு இள
அன்னம்  
-   மிக்க  இளமை  வாய்ந்த அன்னப் பறவைகள்; சுளியும்
மென்  நடை  
-  (நாம்)  பகைக்குமாறு. நம் மெல்லிய நடையினையும்;
தோற்க  நடந்தவர்  
-  தோற்றுப் போம்படி நடக்கின்ற இம்மகளிரின்;
ஒளி  கொள்  சிறுஅடி ஒப்பன  ஆம்  என  
-  ஒளியுடைய  சிறிய
அடிகளை  (இவை)   ஒத்திருக்கின்றனவாம்   என்று   எண்ணியதனால்;
விளிவு  தோன்ற
- (தம் மனத்திலுள்ள)  கடுங்கோபம் வெளிப்படுமாறு;
மிதிப்பன  போன்றன  
- (அத் தாமரை மலர்களைத் தம் கோபம் தீர)
காலால் மிதிப்பவற்றைப் போன்றிருந்தன.

பகைவரை     வெல்ல     இயலாது     போயின்.     அவரோடு
தொடர்புடையாரையும்  வெறுத்து  ஒறுக்கும்  மன  இயல்பினையுணர்ந்த
கவிஞர்    தம்மை    நடையழகால்    வென்ற    மகளிர்க்குத்   தாம்
இயற்றலாகும்.  தீமை  ஒன்றும்  இல்லாமையால்.  அன்னப்  பறவைகள்
அம்மகளிரின்  அடியிணைகளை  ஒத்த   தாமரை   மலர்களைத்   தம்
ஆத்திரம்  தீர  மிதிப்பன போலத் தாமரை மலர்கள்  மேலிருந்து  தம்
கால்களால் மிதித்தன என்றார் - தற்குறிப்பேற்ற அணி.            26

                                            ஆடவர் வேட்கை
 

955.

எரிந்த சிந்தையர். எத்தனை என்கெனோ?
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்.
தெரிந்த கொங்கைகள். செவ்விய நூல் புடை
வரிந்த பொற் கலசங்களை மானவே!

 

அழி     சாந்து போய் - (நீர்  விளையாட்டால்  பூசிய) சந்தனம்
அழிந்து   போய்;  அரிந்த  கூர்  உகிரால்  - அரிந்த  கூரிய  நகக்
குறிகளோடு; தெரிந்த கொங்கைகள் - தோன்றிய (மகளிரின்) தனங்கள்;
செவ்விய  நூல்புடை  வரிந்த  
-  அழகிய  நூல்களைப் பக்கங்களில்
சுற்றியுள்ள;  பொன்  கலசங்கள் மான - பொற்குடங்களை ஒத்திருக்க;
எரிந்த  சிந்தையர்  
-  (அது  கண்டு)  மனம் கொதித்த ஆடவர்கள்;
எத்தனை என்கெனோ?
- எத்தனை பேர் (நான்) சொல்ல வல்லனோ?
(வல்லேன் அல்லேன்)

உகிர்:     நகம்.  நகக்குறியைக்  குறித்தது  - ஆகுபெயர். நூலைப்
பக்கங்களில்     சுற்றிய      கலசங்கள்     வேள்விக்குரியனவாதலால்
மைந்தர்க்குக்  காம  வேள்வி  நினைவுக்கு  வந்தது. நகக் குறி கீறல்கள்
பட்ட  தனங்கள்.  வேள்விக்கு  நூல்  சுற்றிய பொற்  குடங்கள் போல்.
நீராடலால்   சந்தனம்   கரைந்த   போது   காட்சிப்பட்டதால்.   காம
வேள்வியின் கனல்பற்றி எரிந்த சிந்தையர் எத்தனைபேர் என