பக்கம் எண் :

606பால காண்டம்  

ஏ-அசை     -   தற்குறிப்பேற்ற   அணி.  தள்ளி ஓடி (அலைகள்)
ஒன்றையொன்று  தள்ளிக் கொண்டு ஓடி எனினுமாம்.  புனல்  ஆடுவார்
பலராதலால்.  அலைகள்  எழுவதும்  விழுவதுமாகப்  பல  ஆகின்றன.
அதனால்.   ஆங்குள்ள   தாமரைகள்    முழுகுவதும்   எழுவதுமாகத்
தடுமாறுகின்றன.  இதனை  மனக்  கண்ணாற் கண்ட  கவி.  புள்ளிமான்
அனையார்  முகம்  போல்கிலாதது  கண்டு  உள்ளம் நாணி  ஒளிப்பன
போன்றிருந்தன   என்று   தன்   கருத்தையேற்ற   அழகூட்டினார்  -
தற்குறிப்பேற்ற   அணி.   நீரில்    மூழ்கிய    தாமரைகள்   மீண்டும்
வெளிப்படுமாதலின்.  மூழ்கின  போன்றவே   என்னாமல்   “ஒளிப்பன
போன்றவே” என்றார்.                                       29

                        நீராடியபின் ஆடையாபரணங்கள் அணிதல்
 

958.

இனைய எய்தி இரும் புனல் ஆடிய.
வனை கருங் கழல் மைந்தரும். மாதரும்.
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறினார்.
புனை நறுந் துகில். பூணொடும் தாங்கினார்.

 

இனைய   எய்தி - இப்படியாக; இரும்புனல் ஆடிய - பெரிய (நீர்
நிலைகளில்)  நீராடிய;  கருங்கழல் வனை - வலிய (வீரக்) கழல்களைப்
பூண்ட;  மைந்தரும்  - ஆடவரும்; மாதரும் - பெண்டிரும்; அனைய
நீர்வறிதாக  
-  தம்மைப்  பிரிதலால்.  அந்த  நீர்  நிலைகள் ‘வெறிச்’
சென்று  ஆகும்படி; வந்து  ஏறினார் - (அவற்றை விட்டு) வந்து (கரை)
யேறினார்;  புனை  நறுந்துகில்  - (தாம்) புனைவதற்குரிய மணமுடைய
ஆடைகளை;   பூணொடும் -  அணிகலன்களோடும்;  தாங்கினார்  -
அணிந்து கொண்டனர்.

கோசல  நாட்டு மக்கள் இருக்குமிடம் எல்லாம் செல்வம் கொழிக்கும்
திருவிடம்   ஆதலால்.   அவர்கள்   வெளியேறியுடன்   பொய்கைகள்
வறிதாகிப்  போயின  என்றார்.  எங்கும்.  எதிலும்   வளம்  செழித்துக்
கிடப்பதே  கவிஞர்  பெரு விருப்பம். ஆதலின்.  மைந்தரும்  மகளிரும்
வெளியேறினவுடன்  பொய்கை  வறிதாகப்  போயிற்று   என்று  கவிஞர்
வருந்துகிறார்.  அவர்கள்  நீர்  உள்ளிருக்கையில்.  புனை  நறுந்துகிலும்
பூண்ட அணிகலன்களும் உள்ளிருந்தன. பொய்கை  செல்வம்   பூரித்துக்
கிடந்தது.  அவர்கள்  வெளிப்போந்தவுடன்   அவையும்  வெளியேறின.
ஆதலால். “அனைய நீர் வறிதாக வந்து ஏறினார்” என்றார்.       30
 

959.

மேவினார் பிரிந்தார்; அந்த வீங்கு நீர்.
தாவு தண் மதிதன்னொடும் தாரகை
ஓவு வானமும். உள் நிறை தாமரைப்
பூ எலாம் குடி போனதும். போன்றதே.
 

மேவினார்    பிரிந்தார் - (அந்நீர் நிலையுள்) விருப்பத்தோடு நீர்
விளையாடிய  ஆடவரும்  மகளிரும்  (அங்கிருந்து)  பிரிந்து சென்றனர்;
அந்த   வீங்கு  நீர்
-  (அதனால்)  (நீர்)  நிறைந்திருந்த  அந்த  நீர்
நிலையானது;   தாவுதண்  மதி தன்னொடும்  தாரகை  -  தவழ்ந்து
செல்லும்  குளிர்  நிலாவும் விண்மீன்களும்;  ஓவு வானமும் - விலகிச்
சென்று