பக்கம் எண் :

  நீர்விளையாட்டுப் படலம்607

விட்ட     ஆகாயத்தையும்;   உள்நிறை  தாமரைப்  பூ  எலாம்  -
(தன்)னுள்ளே  நிறைந்திருந்த  தாமரை  மலர்கள் யாவும்; குடிபோனதும்
போன்றது    
-   வேறிடத்திற்குக்   குடி    பெயர்ந்து   போய்விட்ட
பொய்கையையும் போல் ஆயிற்று.

தன்னிடம்  நீராட வந்த அழகுபொலியும் கோசலநாட்டு ஆடவராலும்
மகளிராலும்     தனியழகு     பெற்றிருந்த     நீர்நிலை.    அவர்கள்
பெயர்ந்ததனால்   விண்மீன்களை    இழந்து   போன   வானத்தையும்.
தாமரை    மலர்களை     இழந்துவிட்ட     தடாகத்தையும்   போலப்
பொலிவிழநது  போயிற்று  என்று  ஏங்குகிறார். “மீன் எலாம் சூழ நின்ற
விரிகதிர்த்  திங்களையும்” “வண்ணப்  பூவெலாம்  மலர்ந்த  பொய்கைத்
தாமரையையும்”   (கம்ப.  943)  உவமித்துள்ளார்   ஆதலின்.   இங்கு.
“தண்மதி  தன்னொடும். உள்நிறை தாமரைப்  பூ  எலாம் குடிபோனதும்
போன்றது”     என்று     பொருத்தமுற     உவமித்தார்.     மகளிர்
வெளியேற்றத்தைப்  “பூவெலாம்  குடிபோனது போன்றது”  எனல்  மகா
கவிகட்கே வாய்க்கவல்ல சொல்லாட்சி எனலாம்.                  31

                    கதிரவன் கடல் புகலும் சந்திரன் எழுச்சியும்
 

960.

மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய
ஆன நீர் விளையாடலை நோக்கினான்;
தானும். அன்னது காதலித்தான் என்.
மீன வேலையை. வெய்யவன் எய்தினான்.
 

மானின்   நோக்கியர் -  மான் கண்களை ஒத்த விழிகள் கொண்ட
மங்கையர்;  மைந்தரொடு  ஆடிய  -  ஆடவரோடு நிகழ்த்திய; ஆன
நீர்விளையாடலை  
-  (காணத்)தக்க நீர் விளையாடலை; நோக்கினான்
வெய்யவன்   
-   நோக்கினவனான   கதிரவன்;   தானும்  அன்னது
காதலித்தான்  என  
-  தானும்   அந்த  நீர்  விளையாடல்  நிகழ்த்த
விரும்பியவனைப்  போல;  மீன்  வேலையை  எய்தினான் - மீன்கள்
நிரம்பி?யுள்ள (மேலைக்) கடலையடைந்தான்.

சிறந்த     விளையாடல்களைப் பார்த்தவர்கள். தாமும் அவ்வாடலை
ஆட.  உடனே   மனக்கிளர்ச்சியுறுதல்   இயல்பாதலின்  அம்மனவியல்
உணர்ந்த கவிஞர் கதிரவன் மறைவை  இவ்வாறு  அணியுறக் கூறினார் -
தற்குறிப்பேற்ற  அணி.  அவர்கள்  விளையாடியது  நீர்  விளையாட்டே
ஆதலின் தானும் அந்நீர் விளையாட பெரு நீர்  நிலையமாகிய  கடலில்
கதிரவன் இறங்கினான்.                                      32
 

961.

ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும். தம்
வேற்று மன்னர்தம்மேல் வரும் வேந்தர்போல்.
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும்
தோற்ற சந்திரன். மீளவும் தோற்றினான்.

 

ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும் -  (தம்  பகை  மன்னரை
வெல்ல) வலிமையில்லாமையால் (முன்பு) தோற்றுப் போயிருந்தும்;