18. உண்டாட்டுப் படலம் தசரதனது சேனை மதுவினை உண்டு மகிழ்ந்தாடுகிற நிகழ்ச்சிகள் கூறும் பகுதி: நிலா எழுந்ததால் அதன் தண் ஒளி எங்கும் பரவுகிறது. அத் தண்ணொளியில் காமனின் ஆட்சி விரவுகிறது. மகளிர் மதுவினைப் பருகிக் காமத்தழலுக்கு நெய் வார்க்கின்றனர். மது மயக்கம் பல மயக்கங்கட்குக் காரணம் ஆகிறது. ஊடலும் கூடலுமாக இரவு கோலாகலமாகக் கழிகிறது. திங்கள் மறைகிறான். காலைக் கதிரவன் எழுகிறான். எங்கு நிலாப் பரந்து பெருகிய தோற்றம் |