பக்கம் எண் :

610பால காண்டம்  

கலந்தவர்க்கு     இனியது  ஓர்  கள்ளும்  ஆய்  -  (ஆணும்
பெண்ணுமாகக்)    கூடி    மகிழ்ந்திருப்பவர்கட்கு   இனிமை   நல்கும்
மதுவாகவும்;  பிரிந்து உலர்ந்தவர்க்கு உயிர் விடு  விடமும் ஆய் -
(துணைவரைப்)   பிரிந்து    வருந்துவார்க்கு    (உண்டார்)   உயிரைப்
போக்கவல்ல  நஞ்சாகவும்; உடன்புலந்தவர்க்கு  உதவி  செய்  புதிய
தூதும்   ஆய்  
-   துணைவருடன்  ஊடல்  கொண்டவர்க்கு  (இன்ப
நிலையை  மிகுவிப்பதால்  ஊடல்   நீங்கிக்  கூடல்   கொள்ள)  உதவி
செய்கின்ற  புதிய  தூதுவன்  ஆகவும்; மதனன் வேண்ட  - மன்மதன்
(தன் தொழிலுக்கு உதவுமாறு) வேண்டியதனால்; நெடுநிலா மலர்ந்தது -
ஒளிமிக்க நிலவானது வானில் ( ஒரு வெண்மலர் போல) மலர்ந்தது.

காம     வேளின்   பணிக்கு   இரவும் நிலவும் பெரிதும் வேண்டப்
படுவதாதலின்  “மதனன் வேண்ட   நெடுநிலா மலர்ந்தது” என்றார். ஒரு
பொருள்  மக்கள்  மனநிலைக்கேற்ப  பல்வகைப்  பயன்தரும் என்கிறார்.
நிலா.  கூடுவார்க்கு  மேலும்   மேலும்  கூடும்  விருப்பம் உண்டாக்கும்
ஆதலின்  மேலும் மேலும் உண்ண விருப்பம்  ஊட்டும்  கள்  ஆகவும்;
பிரிந்தவர்க்கு.  விடம்மேலும் மேலும் உயிரை  நெருக்குவதுபோல்  நிலா
உயிரை   நெருக்குதலால்  நஞ்சு  ஆகவும்;   ஊடியவர்க்கு   வேட்கை
மிகுவித்துக்   கூட  உந்துதலால்  நிலா.  ஒரு   புதிய  தூது  ஆகவும்
ஆயிற்று.  பாணன்  பாடினி.  தோழியர்  இருக்கவும்.  இது.  அவரினும்
மிகு நெருக்கும் தூது ஆதலின் “புதிய தூதும் ஆய்” என்றார்.       2
 

964.

ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்.
கூறு பாற்கடலையே ஒத்த; குன்று எலாம்
ஈறு இலான் கயிலையே இயைந்த; என் இனி
வேறு நாம் புகல்வது. நிலவின் வீக்கமே?
 

ஆறு எலாம் கங்கையே ஆய - (நிலவொளி பரவியதால்) ஆறுகள்
யாவும்  (வெண்ணிறம்  பெற்று)  கங்கையாற்றினையே ஒத்தவை ஆயின;
ஆழிதாம் கூறுபாற் கடலையே ஒத்த
- கடல்கள் யாவும் (சிறப்பித்துக்)
கூறப்படும். திருப்பாற்கடலையே  ஒத்தவை ஆயின; குன்று எலாம் ஈறு
இலான்   கயிலையே   இயைந்த  
-  மலைகள்  யாவும்  (வெள்ளிப்
பனிமலையாய்ச்)  சிவ  பெருமான்   வாழும்   திருக்கயிலை  மலைக்கு
ஒப்புச்  சொல்லலாம்படி இருந்தன; நிலவின் வீக்கம் வேறு நாம் இனி
என்  புகல்வது?  
-  நிலவொளியின்  பெருக்கிற்குத்  தனியாக  யாம்
இனிப்புகல என்ன உள்ளது?

நிலவொளியால்     உலகு   வெண்மையில்  மூழ்கிக் கிடந்தமைக்கு
வெண்மையிற்  சிறந்த  மூன்று  உலகப்   பொருள்களை  உவமையாக்கி
விளக்கி  விட்ட  மனநிறைவில்.  “என்   இனி  வேறு நாம் புகல்வது?”
என்கின்றார்.  நிலாக்  கதிரின்  வெண்மை   வீச்சால்.  (கரிய)  யமுனை
முதலிய   ஆறுகள்   கங்கை  ஆயின;  பிற   கருங்கடல்கள்   யாவும்
பாற்கடல்  ஆயின;  (நீல) மலைகள் யாவும் கயிலை  ஆயின  என்றார்.
சிவபிரானை.  “ஈறு  இலான்” என்றதனால்.  கவிஞரின்  சமயப் பொறை
விளங்கும்.                                                 3