பக்கம் எண் :

  உண்டாட்டுப் படலம்613

என     வள்ளுவரும்  உரைப்பார்.  (திருக். 1121)  விண்ணக  மகளிரும்
வித்தியாதர மகளிரும் ஒளிமேனிப்  படைத்தவர்  ஆயினும்.  ஊன்மேனி
படைத்த  இவ்வுலகப்  பெண்களுக்கு  ஒப்பாகார்.  அவர்கள்   இமையா
நாட்டம்  பெற்றவர் ஆயினும்  இமைத்து  மருட்டும்  இம்மடந்தையர்க்கு
ஈடாகார்  என்பார் “மான்  உடை நோக்கினார்” என்ற நுட்பம் உணர்க.
உடைதல்; தோற்றல்.                                         7
 
 

969.

உக்க பால்புரை நறா உண்ட வள்ளமும்.
கைக் கொள் வாள் ஒளிபடச் சிவந்து காட்ட. தன்
மைக் கணும் சிவந்தது; ஓர் மடந்தை வாய்வழிப்
புக்க தேன் அமிழ்தமாய்ப் பொலிந்த போன்றவே.
 

ஓர்  மடந்தை  வாய்வழிப்  புக்க  தேன்  -  ஒரு  மங்கையின்
வாய்வழியாகப் புகுந்த  மது; அமிழ்தமாய்ப் பொலிந்த போன்றவே -
அமிழ்தமாக  அவளுக்குள்  விளங்கியது; உக்கபால் புரை நறா உண்ட
வள்ளமும்  
-  சிந்திய  பாலினை  ஏற்று  நிற்பது போன்ற வெண்ணிற
மதுவினை  ஏந்தியிருந்த (பளிங்காலான)  மதுக்கிண்ணமும்; கைக்கொள்
வாள்   ஒளி   படச் சிவந்து  காட்ட
-  (மதுவைப்  பருக  எடுத்த
அவளுடைய  சிவந்த  கைகள்   கொண்டுள்ள   சிறந்த  ஒளிபடுதலால்
செந்நிறமாகத்  தோன்ற;  தன்மைக்கணும்  சிவந்தது  -  அவளுடைய
கருங்கண்ணும் (மதுவின் வேகத்தால்) செந்நிறம் பெற்றது.

அவளுக்கு.    மதுவின் வேகத்தால் கண் சிவந்தது இயல்பு; ஆனால்
அவள்  மதுவுண்ட  மதுக்  கிண்ணமும்  சிவந்தது   என  நயந்தோன்ற
மதுவின்  கடுமை  கூறியவாறு.  கள்  உண்பார்க்குக்   கண்   சிவத்தல்
இயல்பு.   இனி.   நறாவும்  நறா   உண்ட   வள்ளமும்  சிவந்த  என
இயைப்பினுமாம்.   நறா  கைபடச்  சிவந்து தேன்  ஆயிற்று.  வாய்படத்
தண்ணிய   அமுதாக்கிற்று.    வள்ளத்தைச்    சிவப்பாக்கிற்று   என்று
மதுதொட்ட எதையும் மாற்றாமல் விடாது என்றார் எனினுமாம்.       8
 

970.

தாமமும் நானமும் ததைந்த. தண் அகில்
தூமம். உண். குழலியர் உண்ட தூ நறை.
ஓம வெங் குழி உகு நெய்யின். உள் உறை
காம வெங் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே.

 

தாமமும் நானமும் ததைந்த தண்ணகில் தூமம் உண்குழலியர் -
மலர்மாலையும்.  புனுகும்  நிறைந்த.   குளிர்ந்த   அகில்புகை  யூட்டப்
பெறும்  கூந்தலையுடைய மகளிர்; உண்ட  தூநறை - உண்ட தூய மது;
வெங்குழி  உகு  ஓம  நெய்யின் 
- கனல் நிறைந்த யாககுண்டத்திலே
பெய்த  ஓமநெய்யைப் போன்று; உள்நிறை வெங்கனலினைக் கனற்றிக்
காட்டிற்று  
-  (அவர்தம்)  உள்ளத்துள்ளே  உறைகின்ற கொடிய காமக்
கனலினை (மேலும்) சூடேற்றச் செய்தது.

நெய்யால் கனல்  அணையாது  மேலும்  மிகுதல்  போல.  மதுவால்
காமம் அடங்காது மேலும் மிகும் என்றுணர்த்தியவாறு.