பக்கம் எண் :

614பால காண்டம்  

அவர்கள்    உள்ளக்  குழிக்குள் நீறுபூத்த நெருப்பாய்க் காமக்கனல்.
முன்பே  உறைந்து  கிடந்தது.  அக்   கனலை   நெய்யூற்றி எழுப்புதல்
போல.  மது  ஊற்றிச் சுடர்விடச் செய்தனர் என்பார்.  “உள்நிறை  காம
வெங்கனலினைக் கனற்றி” என்றார். ஓம வேள்விக்கு.  நெய்போல.  காம
வேள்விக்கு  மது  உந்துசக்தி.  குழலுக்கு  அகிற்புகையூட்டலும்.  மாலை
சூட்டலும்.   புனுகு  பூசலும்.   கள்ளால்   மிகுந்த  காமத்தை  மேலும்
கொழுந்திடச் செய்யும் வாயில்களாம்.

“அளிந்து  அகத்து   எரியும்  தீயை  நெய்யினால்  அவிக்கின்றார்”
(கம்ப: 4359) என்பார் பின்னும்.                               9

                         கள் மயக்கத்தால் நிகழ்ந்த தடுமாற்றங்கள்

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

971.விடன் ஒக்கும் நெடிய நோக்கின்
   அமிழ்து ஒக்கும் இன்சொலார்தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டே? -
   வாள் நுதல் ஒருத்தி காணா.
தடன் ஒக்கும் நிழலை. ‘பொன் செய்
   தண் நறுந் தேறல் வள்ளத்து
உடன் ஒக்க உவந்து நீயே
   உண்ணுதி. தோழி!’ என்றாள்.
 

வாள்  நுதல்  ஒருத்தி -  ஒளி நிறைந்த நெற்றியுடையாள் ஒருத்தி;
தடன் ஒக்கும் நிழலை
-  (தன்னைப் போன்றே அழகின்) பெருமையில்
ஒத்திருக்கும்   தனது  நிழலை;   பொன்செய்   தண்நறும்   தேறல்
வள்ளத்துக் காணா
-  பொன்னால் செய்யப்பட்ட குளிர்ந்த மணமுள்ள
மதுவின்  கிண்ணத்தில்  கண்டு; தோழி.  உடன் ஒக்க உவந்து நீயும்
உண்ணுதி  என்றாள்  
-  “தோழியே!  நீயும்  என்னோடு  இணைந்து
மகிழ்ந்து  (இம்மதுவினை)  உண்ணுவாய்!’  என்று வேண்டினாள்; விடன்
ஒக்கும்    நெடியநோக்கின்    
-    (விரும்பாதார்க்கு)   நஞ்சனைய
நீண்டவிழிகளையும்;  அமிழ்து ஒக்கும் இன்சொலார்தம் - (உண்பாரை
நீண்டு  வாழ்விக்கும்) அமிழ்தம் போல.  கேட்டார்  செவிக்கு நெடுநாள்
இனிக்கும்  இன்  மொழியும்  உடைய  மகளிருடைய;  மடன்  ஒக்கும்
மடனும்   உண்டே?   
-   அறியாமை  போன்ற  அறியாமை  வேறு
எவரிடத்தும் உண்டோ? (இல்லை என்க)

அச்சம்.     மடம்.    நாணம்.    பயிர்ப்பு    என்னும்    மகளிர்
நாற்குணங்களுள்  ஒன்றான  இம்  மடம்  பெண்   இயல்புக்கு  மேலும்
அழகு சேர்ப்பதனை இப்பாடலாலும் காண்க.

வேற்றுப்   பொருள் வைப்பணி. காணா - கண்டு ; செய்யா என்னும்
எச்சம்.  “இருநோக்கு  இவள்  உண்கண்  உள்ளது; ஒரு நோக்கு நோய்
நோக்கு”  (திருக்.  1091)  என்பராதலின்.   “விடன்  ஒக்கும்  நோக்கு”
என்றார். கேட்