பக்கம் எண் :

622பால காண்டம்  

மாற்ற அருங் கரதலம் மறிக்கும் - மாது. ஒரு
சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே.
 

ஒருமாது.  சீற்றம்ஆம் அபிநயம் தெரிக்கின்றாரின் - ஒருபெண்.
வெகுளியுற்றோர்  அபிநயம்   (இது   என்று  தெரிந்து  கொள்ளுங்கள்
எனக்)  காட்டுவாள்  போன்று; கூற்று  உறழ்  நயனங்கள்  சிவப்ப -
(விரும்பாதார்க்கு)    இயமனைப்     போன்று     துன்பம்   செய்யும்
இருவிழிகளும்  (மது வேகத்தால்) சிவந்து போகவும்; கூன் நுதல் ஏற்றி
-  வளைவுகள் நெற்றியில் தோன்றுமாறு  புருவங்களை (நெரித்து) மேல்
ஏற்றி;  வாள்  எயிறுகள்  அதுக்கி  - ஒளியுடைய பற்களைக் கடித்து;
இன்தளிர்மாற்று  அருங்  கரதலம்  மறிக்கும்
-  கண்ணுக்கு  இனிய
தளிரின்  அழகைத்  (தமக்கு   முன்னே   தலையெடுக்க  இயலாதவாறு
போக்குகின்ற (அழகுடைய கைத்தலங்களை மடக்குவாள்.)

மதுவுண்டால்     நிகழும்    மெய்ப்பாடுகளோடு    வெகுண்டோர்
மெய்ப்பாடுகள்   ஒக்கும்   என்பதால்.   அது   வெறுக்கத்தக்கதென்று
உணர்த்தியவாறு.

வெகுண்டோன்     அவிநயம்.  “மடித்த  வாயும்  மலர்ந்த மார்பும்.
துடித்த   புருவமும்.  சுட்டிய  விரலும்.  கன்றிய   உள்ளமொடு   கை
புடைத்திருத்தலும்” (சிலம். மேற். அடியார். 3.12.)ஆம்.             21
 

983.

துடித்த வான் துவர் இதழ்த் தொண்டை. தூ நிலாக்
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி. கண்களால்
வடித்த வெங் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய்
பொடித்த வேர். புறத்து உகு நறவம் போன்றவே!

 

துடித்த வான் துவர் இதழ்த் தொண்டை- துடிக்கின்ற மிகச் சிவந்த
வாய்  இதழ்களாகிய  கொவ்வைக்  கனியை;  தூநிலாக்  கடித்த வாள்
எயிறுகள்   அதுக்கி   
-  வெண்ணிற  நிலாவினைக்  துண்டு  செய்து
வைத்துள்ளது  போன்ற  ஒளிபொருந்திய  பற்களாற்  கடித்து; வெடித்த
வெங்குருதி  வேல்  கண்களால் விழிக்கும்  
- கூர்மை செய்யப்பட்டு
(பகைவரின்)   கொடுங்குருதி  தோயப்பெற்ற   வேல்களைப்   போன்று.
மதுவால்  சிவந்து  போனதன்  கண்களால்  பார்க்கின்ற; மாதர்  மெய்
உகும் பொடித்த வேர்
- ஒருத்தியின் உடம்பில் சிந்தும் வியர்வை நீர்;
புறத்து  உகு  நறவம்  போன்றது
-  உடலுட்  சென்ற மது வெளியே
சிந்துவது போன்றிருந்தது.

உள்ளே     சென்ற  மதுவே  பெண்தன்மைக்கு மாறான இத்தகைய
மெய்ப்பாடுகளைத் தோற்றுவித்தவாறு  வெளியே  சிந்தியது.  குடித்தகள்
உள்ளே   நிரம்பி   அங்கு  இடமின்மையால்.   மயிர்க்கால்   தோறும்
வெளியே  கசிவது  போல.  உடல்  வெயர்த்தது   என்பதாம்.  உள்ளே
இடமில்லாது  போனாலும்.  ஊற்றிக்  கொண்டே   இருப்பதால்.   நுண்
துளை வழியாக உட்சென்றது வெளியே புறப்பட்டது எனினுமாம்.     22